Villupuram

News November 3, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவம்பர். 03) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 3, 2025

செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவர திருத்தம் பணி

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 70 செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான சிறப்பு தீவர திருத்தம் பணிக்கான கணக்கீட்டு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் இன்று (நவ.03) வழங்கினார். செஞ்சி வருவாய் வட்டாட்சியர் திரு.துறைசெல்வன் உட்பட பலர் உள்ளனர்.

News November 3, 2025

விழுப்புரம்:இளைஞர்களே செம வாய்ப்பு..மிஸ் பண்ணிடாதீங்க!

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News November 3, 2025

விழுப்புரம்: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

திண்டிவனத்தில் ரூ.60 கோடி மதிப்பில் மருத்துவமனை!

image

திண்டிவனத்தில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை, இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் மருத்துவமனை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டது. மீதமுள்ள அனைத்து பணிகளும் 10 நாட்களுக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News November 3, 2025

விழுப்புரத்தில் மின்தடை!

image

விழுப்புரம், அவலூர்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (நவ.4) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன்படி, அவலூர்பேட்டை, வடுகப்பூண்டி, கொடம்பாடி, பறையம்பட்டு, தாழங்குணம், குந்தலம்பட்டு, சம்பளம்பாடி, கோட்டப்பூண்டி, கோவில் புரையூர், நொச்சலூர், கீக்கலூர், மேக்களூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

விழுப்புரம்: ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

image

காஞ்சிபுரம் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 3, 2025

விழுப்புரம்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

விழுப்புரம்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!