Villupuram

News April 12, 2025

ரயில்வேயில் வேலை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை. கல்வித்தகுதி – 10ஆம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். பொறியியல் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 12, 2025

விக்கிரவாண்டியில் நாய் கடித்து 7 ஆடுகள் பலி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சேர்ந்தவர் ரஹீம், 56; ஆடு வியாபாரி. இவர் மேலக்கொந்தை ரோட்டில் வி.ஜி.ஆர்., நகரில் பட்டியில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் சுற்றி திரிந்த நாய் திடீரென பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில் இரண்டு பெரிய ஆடுகள் உட்பட 7 ஆடுகள் இறந்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

News April 11, 2025

அமைச்சர் பொன்முடி பதவியில் எம்.பி திருச்சி சிவா

image

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி அந்த பொறுப்ப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக  கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் . திருச்சி சிவா, எம்.பி., அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இனி துணை பொதுசெயலாளராக நியமிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News April 11, 2025

விழுப்புரம் மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

▶மாவட்ட ஆட்சியர் – 9444138000 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008160 ▶காவல்துறை கண்காணிப்பாளர்- 9498100485 ▶ வட்ட வழங்கல் அலுவலர், விழுப்புரம்- 9445000201 ▶ நகராட்சி ஆணையர், விழுப்புரம் – 04146-222206 ▶வருவாய் கோட்டாட்சியர் அலுவலர், விழுப்புரம் – 9445000424 முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 11, 2025

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

image

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் தொழிலாளி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 11, 2025

அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அதிக மாத்திரைகளை விழுங்கிய பெண் உயிரிழந்தார். செஞ்சி வட்டம் காட்டுசித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்விழி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

News April 11, 2025

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் தாலுகா அலுவலகங்களில் நடத்தப்படுகின்றன. ரேஷன் கார்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கைகளையும் நீங்கள் தெரிவிக்கலாம். இதில், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் ஆகியவற்றை இலவசமாகவே செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 10, 2025

சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

image

புதுச்சேரி பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுகுமார். இவரது மனைவி செல்லியம்மாள் கடந்த சில மாதங்களாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை கீழ் புத்துப்பட்டு அடுத்த மாத்தூரில் உள்ள தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 10, 2025

பாமக தலைவராக நானே தொடருவேன் ராமதாஸ் அறிவிப்பு

image

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அன்புமணி பாமக செயல் தலைவராக செயல்படுவார் என்றும், சட்டமன்றத்திற்கு நாடாளுமன்றத்திற்கு சென்றதில்லை,பதவி பெரும் ஆசை எனக்கு இல்லை என்றும்,2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!