Villupuram

News February 27, 2025

மணல் கடத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது

image

திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கின்ற மருவூர் ராஜா. இவர் மீது சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் எஸ்பி சரவணன் பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் ஷேக் அப்துர் ரஹ்மான் உத்தரவின் படி நேற்று போலீசார் மருவூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News February 27, 2025

13 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்; வாலிபர் கைது

image

சென்னை மீஞ்சூரை சேர்ந்தவர் பாபு மகன் ராஜி(25). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வானூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி கூலி செய்தார். கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி சிறுமியை கட்டாய திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர்.

News February 27, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் இன்று (பிப்ரவரி 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News February 26, 2025

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அலுவலகத்தில், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிப்பெருவிழாவினை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவல்துறையினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (26.02.2025) நடைபெற்றது. உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் இருந்தார்.

News February 26, 2025

பைக் மீது லாரி மோதியதில் இளைஞர் பலி

image

விழுப்புரம் கருங்காலிப்பட்டு சேர்ந்த அஜித் (26),தொழிலாளி இவா், பிப்24 இரவு புதுச்சேரி – திருக்கனூர் சாலையில் கண்டமங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட நெற்குணம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.பைக் மீது அந்தப் பகுதியில் வந்த டிப்பர் லாரி மோதியதில் அஜித் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 26, 2025

9 ரயில்களின் சேவையில் மாற்றம்

image

விழுப்புரம் யார்​டில் பொறி​யியல் பணி காரண​மாக, விரைவு ரயில் சேவை​யில் மாற்றம் செய்​யப்பட உள்ளது. தாம்​பரம் – விழுப்பு​ரத்​துக்கு பிப்​.,28-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்​படும் மெமு ரயில் முண்டியம்​பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் 15 மற்றும் 25 ஆண்டுகள் பணியின் போது தண்டனை இல்லாமல் சிறப்பாக பணிபுரிந்த 4 பேருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA PADAK / UTKRISHT SEVA PADAK இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், நேரில் அழைத்து பதக்கங்கள் அணிவித்தார். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி (Rtd), (AUSP) பதக்கம் பெற்றார்.

News February 25, 2025

மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 4ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முகாமைச் சேர்ந்த இந்திரன் (24) என்பவருக்கு திருமணமாகி 1 பெண் குழந்தை உள்ளது. இவர் கடந்த பிப்., 23ஆம் தேதி முகாமை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் இந்திரனை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

News February 25, 2025

9 ரயில்களின் சேவையில் மாற்றம்

image

விழுப்புரம் யார்​டில் பொறி​யியல் பணி காரண​மாக, விரைவு ரயில் சேவை​யில் மாற்றம் செய்​யப்பட உள்ளது. தாம்​பரம் – விழுப்பு​ரத்​துக்கு பிப்​.,28-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்​படும் மெமு ரயில் முண்டியம்​பாக்கம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்​யப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!