Villupuram

News September 5, 2025

விழுப்புரம்: அண்ணா, பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டி.

image

விழுப்புரம் மாவட்டத்தில், அண்ணா, பெரியார் பிறந்தநாளை முன்னிட்டுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு செப்.9, 10 தேதியில் முருங்கப்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செப்.11 விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது. முதல் பரிசு ரூ.5,000, 2ம் பரிசு ரூ.3,000, 3ம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்

News September 5, 2025

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் கைது

image

விழுப்புரத்தில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றதாகக் கூறிய பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பாஜகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

News September 4, 2025

விழுப்புரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்தியவர் கைது

image

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News September 4, 2025

விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில்

image

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, செப்.7 காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் முற்பகல் 11.45 மணிக்குத் தி.மலை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

image

திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளர் ஒருவரை திமுகவினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டப்படி தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News September 4, 2025

விழுப்புரம்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27426055) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News September 4, 2025

விழுப்புரம்: மதுவிலக்கு பிரிவு போலீசார் 51 பேர் இடமாற்றம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த 51 போலீசாரை இடமாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, செஞ்சி மதுவிலக்கு பிரிவு ஏட்டு புனிதா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும், ஏட்டு கந்தன் தி.வெ.நல்லூர் காவல் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு ஏட்டு ஏழுமலை மேல்மலையனூர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2025

விழுப்புரம்: EB துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும். வயது 18 முதல் 32 வரை இருக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. விருப்பமுள்ளவர்கள் அக்.02க்குள் விண்ணப்பிக்க வேண்டும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

என்ன தகுதிகள் இருக்க வேண்டும் 2/2

image

▶️ பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ஆண்டு வருமானம் 1,20,000 க்குள் இருக்க வேண்டும்.
▶️இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்,
▶️ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்
*இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News September 4, 2025

விழுப்புரம்: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!