Villupuram

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுவோர்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்:
▶️ வழுதாவூர், திருமுருகன்
▶️ ரெட்டணை. பாலசுந்தரம்
▶️ மேல் ஒலக்கூர், இளங்கோவன்
▶️ வளவனுார்,முருகன்
▶️ கப்பை, அருமைசெல்வம்
▶️ செ.பூதுார், விஜயலதா
▶️ மேல்நெமிலி, லட்சுமி நாராயணசாமி
▶️ பக்கிரிதக்கா, ராஜலட்சுமி
▶️ ரெட்டணை, மாசிலாமணி
▶️ ராஜாம்புலியூர், நமச்சிவாயம்
மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஆசிரியர்களின் பெயர்களை SHARE பண்ணுங்க

News September 5, 2025

விழுப்புரம் பெண்கள் இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9150058446) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் 10 பேருக்கு நல்லாசிரியர் விருது

image

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் வெள்ளி பதக்கம், சான்றிதழ் மற்றும் ஐந்தாயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News September 5, 2025

விழுப்புரம்: ரூ.1,50,000 சம்பளத்தில் அரசு வேலை

image

விழுப்புரம்: தமிழ்நாடு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகு வேலைக்கு பல்வேறு பணிகளுக்காக இப்போது விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், நேர்காணலில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த பணிக்கு ரூ 40,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>லங்கில் <<>>சென்று பார்த்துக்கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் .

News September 5, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று (செப்.5) மிலாடி நபியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்படும். அன்று எந்த மதுபானக் கடைகளும் செயல்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

விழுப்புரம்: அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு வழங்கும் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தகுதியுடையவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் பெறப்பட்ட விண்ணப்பங்கள்பூர்த்தி செய்து அங்கேயே வழங்கலாம் என ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

News September 5, 2025

விழுப்புரம்: கார் விபத்தில் 1உயிரிழப்பு ,13 பேர் காயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் வானக்கன்காட்டைச் சேர்ந்த சுரேஷ், அவரது குடும்பத்தினர் & உறவினர் முருகேசன் உட்பட 9பேர், சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருவேல்பட்டு பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற கார் மீது, வேன் மோதி, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 5, 2025

விழுப்புரம் – எழும்பூர் ரயில் சேவையில் தற்காலிக மாற்றம்

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில் (12654) சேவை, எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணியின் காரணமாக செப்.11ம் தேதி முதல் நவ.10ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த செய்தியை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, அதற்கேற்றாற் போல் திட்டமிட்டு பயணிக்கவும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

News September 5, 2025

விழுப்புரம்: மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

image

விழுப்புரம் மாவட்டம் உள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான ராஜேந்திரன், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் திருப்பாச்சனூர் சவுக்குத் தோப்பில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திடீர் சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

News September 5, 2025

விழுப்புரத்திற்கு ஆபத்து

image

கரியமில வாயு உமிழ்வு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், 2100-ஆம் ஆண்டில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கடல் மட்டம் உயரும் என அண்ணா பல்கலை. பேராசிரியர் ஆ. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடல் மட்டம் 52.40 செ.மீ. உயர வாய்ப்புள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!