Villupuram

News November 12, 2024

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ஆட்சியர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சி.மெய்யூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் (14.11.2024) வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.

News November 12, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்லும் போது கவனமாக செல்லவும். உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News November 12, 2024

காணொளி காட்சி மூலம் திறந்த வைத்தார் முதல்வர்

image

காணை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவா, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.

News November 12, 2024

சென்னையில் பதுங்கி இருந்த விழுப்புரம் ரவுடி கைது

image

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய ரவுடி 8 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னையில் பதுங்கியிருந்த விழுப்புரம் ரவுடி மெண்டல் கதிர் என்கின்ற கதிரை விழுப்புரம் நகர காவல் துறையினர் சென்னையில் வைத்து கைது செய்து அவரை விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

News November 12, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேர் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள் செஞ்சி கோவிந்தன் சாத்தம்பாடி குறுவட்டத்திற்கும், சிறுவாடி ஜெய்கணேஷ் செஞ்சிக்கும், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கோமதி சிறுவாடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் மொத்தம் மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 9 பேர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி நேற்று (நவ 11) உத்தரவிட்டுள்ளார்.

News November 12, 2024

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் முதிர்வுத்தொகைக்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மு.பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் உடன் இருந்தனர்.

News November 12, 2024

விழுப்புரத்தில் உள்ள மதுபான ஆலையை மூட வலியுறுத்தி மனு

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் எல்லீஸ் சத்திரம் சாலையில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையை மூட வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மனுவில், மதுபான ஆலையின் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும், இந்த கழிவு நீரை ஏரியில் கொண்டு சேர்ப்பதால், ஏரியில் உள்ள தண்ணீரும் மாசுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

News November 11, 2024

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (11.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News November 11, 2024

மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி இன்று (11.11.2024) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News November 11, 2024

“மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கூடாது”

image

திண்டிவனம் அருகே உள்ள மேல்மாவிலங்கை ஊராட்சி கல்பாக்கம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தங்களது மயானத்திற்கு அருகில் புதிதாக கட்டியுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை அகற்றக்கூடாது என்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!