India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (02.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், வண்டிமேடு பகுதியில் சமூக விழிப்புணர்வு இயக்கம், சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஒலக்கூர் ஊராட்சியில் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சி.வி. சண்முகம் மீதான 4 அவதூறு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கோட்டகுப்பம் ஆகிய பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் சி.வி. சண்முகம் (எம்பி), தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணையை அடுத்த மாதம் நீதிபதி ஒத்தி வைத்தார்.
2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை பகுதியில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுத 2ஆவது ஆண்டாக பயிற்சிமேற்கொண்டு வந்த மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் எஸ்.எஸ்.ஐ., ரவிக்குமார் நெடுஞ்சாலை ரோந்து எண்.6க்கும், விழுப்புரம் தாலுகா வெங்கடேசன் நெடுஞ்சாலை ரோந்து எண்.3க்கும், விழுப்புரம் டவுன் ஷாஜகான் ரோந்து எண்.2க்கும், வளவனுார் அய்யனாரப்பன் கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடிக்கும், விழுப்புரம் மேற்கு பார்த்திபன் கிளியனுார் சோதனைச் சாவடிக்கு என, 80 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ் பி சரவணன் பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் நகராட்சி திடலில் இன்று (மார்ச் 2 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை) புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதனை வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை 10:30 மணியளவில் துவக்கி வைக்க உள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (01.03 2025) இரவு 10.00 மணி முதல் நாளை காலை 5.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில், அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களில் உதவியுடன் கவரை, சிட்டாம்பூண்டி, பாலப்பட்டு, அணையேறி, மாத்தூர் மற்றும் வரிக்கல் ஆகிய ஆறு கிராமங்களில் 40 சிசிடிவி கேமராக்களை பொருத்தி அதனை கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் மருதப்பனை இன்று விழுப்புரம் எஸ்பி சரவணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தொழில் போட்டியில் முதியவரை அடித்துக் கொன்ற முருகன் மனோகா் லட்சுமி வழக்கில் உணவகத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம் நிரூபணமானதால், மனோகருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ. பாக்கியஜோதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.