India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், அனுமந்தையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆய்வு செய்தார்,சராசரியாக 100 புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்துக்கு 5 முதல் 10 வரை மகப்பேறுகள் நடக்கின்றன. 2 மருத்துவர்கள் உள்ளனர். பழைய கட்டடங்கள் ஒழுகுவதால் புதிய கட்டடம் வேண்டுமென கேட்டனர். புதிய கட்டிடம் கட்டி தர உறுதி அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள தாழங்காடு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டினை வீதியில் இருந்து கட்டப்படக்கூடிய நியாய விலை கடையை ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவருடன் மாவட்டச் செயலாளர் மலைச்சாமி நாகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். விரைந்து பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழையளவு விபரம் வெளியிடப்பட்டுளள்து. விழுப்புரம் 11மில்லி மீட்டர், திண்டிவனம் 11 மில்லி மீட்டர், மரக்காணம் 17 மில்லி மீட்டர், செஞ்சி 4 மில்லி மீட்டர், வல்லம் 3.20மில்லி மீட்டர், அவலூர்பேட்டை 3மில்லி மீட்டர், மணபூண்டி 6 மில்லி மீட்டர், திருவெண்ணைநல்லூர் 4 மில்லி மீட்டர், வளத்தி 2மில்லி மீட்டர். சராசரியாக 10.25 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (நவ.15) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ITI, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 1000க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்ய உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர், கண்டமங்கலம், கஞ்சனூர், மதுரபாக்கம் ஆகிய துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.14) மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பை ஏற்று, பொதுமக்கள் வீட்டுப் பணிகளை முன்கூட்டியே முடித்துவிடுங்கள். போன் மற்றும் லைட்டுகளில் சார்ஜ் போட்டு வைத்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை, குறைகளை மனுவாக எழுதி அவரிடம் அளித்தனர். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், சி.மெய்யூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 14.11.2024 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (13-11-2024) 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.
தமிழ்நாடு அரசின் நிதிச் செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் சந்தித்தார். அப்போது வன்னி அரசு உடனிருந்தார். விழுப்புரத்தில் புதிய தொழிற்சாலைகள் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். போதுமான நிலத்தை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து தெரிவித்தால் தொழிற்சாலை துவக்க உடனே நடவடிக்கை எடுக்கலாம் என நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் மீதான தாக்குதல் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்படுவது டாக்டர்கள் தான் என்றார். மேலும், மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், டாக்டர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்க கூடாது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.