India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில், 2023இல் உளுந்தூர்பேட்டை சிப்காட்டில், தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ.2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.23.50 கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 லிப்டுகள், முகப்பு பகுதிகளில் பூங்கா, நகரப் பேருந்துகள் வந்து செல்ல 2 நுழைவாயில்கள், இடவசதிகளுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கும் மையம், அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை, நகரும் நடைமேடைகள், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, CCTV கேமராக்கள், குளிர்சாதன வசதியுடன் தங்கும் ஓய்வறை அமைக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டான் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விழா மேடை அமைப்பதற்கான இடத்தேர்வு குறித்து வழுதரெட்டியில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொதுப்பணித்துறை, கண்காணிப்பு பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளும் பழமையான அருள்மிகு சௌந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் திருக்கோயிலில், இன்றைய கிருத்திகை நாளில் பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் முருகப் பெருமானுக்கு செய்யப்பட்டு, முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கு தேவையான நீட் (NEET) தேர்விற்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் இருந்தனர். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
விழுப்புரத்தில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் க.பொன்முடி, விழாவினை தொடங்கி வைத்து, சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறந்த நியாய விலைக்கடை விற்பனையாளர், கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களை வழங்கினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இளம்பெண்கள் பயன்பெறும் வகை மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்டத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நவம்பர் மாதத்துக்கான முகாம் நேற்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பங்கேற்றனர். தகுதி அடிப்படையில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கு முன்பு இதை தெரிந்து கொள்ளுங்கள். படிவம் 6 – புதிய வாக்காளருக்கான படிவம், படிவம் 6A – வெளிநாடு வாழ் வாக்காளருக்கான படிவம், படிவம் 6B – வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல், படிவம் 7 – பெயரை நீக்குதல், சேர்க்க, ஆட்சேபனை தெரிவித்தல், படிவம் 8 – முகவரி மாற்றம், வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத் திற
18 வயது நிரம்பியும் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் Form-6 மூலம் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். தங்கள் தொகுதிக்குள்ளயே ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்ந்தவர்கள் மற்றும் வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடிப்பெயர்ந்து புது இருப்பிடத்தில் உள்ளவர்கள் அந்த இருப்பிடத்திற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும். மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமும் செய்யலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்பும் வாக்காளர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், ஆதார் எண் இணைப்பவர்கள், பெயர் நீக்கம், பெயர், வயது, பாலினம், கதவு எண், முகவரி முதலிய பதிவுகளில் திருத்தம் செய்வதற்கும், தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, விழுப்புரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.