India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 9) கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் அண்ணா நகர் பகுதியில் ஆட்டோவில் ரகசிய அறை அமைத்து புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த விழுப்புரம் ஜிஆர்பி தெருவை சேர்ந்த சபாபதி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

டெல்லியில் இன்று செப்டம்பர் 9 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் துவங்கிய துணை ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப் பதிவில் விழுப்புரம் நாடாளுமன்ற எம்பி துரை ரவிக்குமார் வரிசையில் நின்று ஓட்டளித்தார். மாலை 5 மணியுடன் முடியும் வாக்குப்பதிவுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை ஆறு மணி அளவில் துவங்கி நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

விழுப்புரம் மாவட்ட தொழில் மையம், பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறப்பு விழிப்புணர்வு முகாம்களை நடத்துகிறது. இம்முகாம்களில், சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்படும். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை செப்.10 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்;
1.கானை வட்டாரம் நல்லாபாளையம் அரசு பள்ளி வளாகம்,
2.வானூர் வட்டாரம் வெங்கடேஸ்வரா திருமண மஹால், உப்பு வேலூர்
3. முகையூர் வட்டாரம் ஜெய அண்ணாமலையார் திருமண மண்டபம் , சென்னாகுணம்
4.மேல்மலையனூர் வட்டாரம் கிராம சேவை மைய கட்டிடம், தாயனூர்
5.விழுப்புரம் நகராட்சி கே ஆர் திருமண மண்டபம் ஆகிய பகுதியில் நடைபெற உள்ளது.

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலை நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தவெகவின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த கையோடு, மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செப்.13 திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கும் விஜய் அக்.18ல் காஞ்சிபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயை காண தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பராமரிப்புப் பணி நடப்பதால், விழுப்புரம் – சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (வண்டி எண் 66046) பகுதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 13, 20, 27 ஆகிய தேதிகளில் இந்த ரயில் விழுப்புரத்திற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:55 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.