Villupuram

News November 18, 2024

இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கி கொள்ளலாம் 

image

மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் 49 காலியிடங்களுக்கு நேரடியாக நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் நேர்காணல் வரும் 25ஆம் தேதி முதல் டிச.04ஆம் தேதி வரை மத்திய கூட்டுறவு வங்கியில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட்டை www.drbvpm.in/hallticket.php இணையத்தில் பதிவிறக்கி நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

அரசு பள்ளியில் பயிலும் 874 பேருக்கு நீட் பயிற்சி

image

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் 4 மையங்களில் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் 113 அரசுப்பள்ளிகளிலிருந்து 770 பேர், 5 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளைச் சேர்ந்த 43 பேர், 3 நகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 11 பேர், 16 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 40 பேர் என மொத்தமாக 874 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

News November 18, 2024

ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு நேர்முக தேர்வு

image

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 49 விற்பனையாளர் பணியிடங்களுக்கு தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள 04146-229854 எண்ணிற்கு அழைக்கலாம்.

News November 18, 2024

நவம்பர் 28, 29 தேதிகளில் முதல்வர் வருகை

image

முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்டு இரு மாவட்ட மக்களுக்குமான திட்டங்களை வழங்கி திமுக உடன்பிறப்புகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது. வரும் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

விழுப்புரத்தில் மணிமண்டபத்தை பார்வையிட உள்ள அமைச்சர்

image

அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் இன்று (18.11.2024) மாலை 03.00 மணி அளவில் ஜானகிபுரம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மணிமண்டபம் மற்றும் 21 சமூகநீதி போராளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபங்களின் கட்டுமான பணிகளை பார்வையிடுகின்றனர்.

News November 17, 2024

ரெட்டணை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்

image

வந்தவாசி அருகே பெரியப்பாக்கம் கிராமத்தில் இருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்திற்கு தனியார் பேருந்தில் 40 பேர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அப்போது, ரெட்டணை அருகே தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

News November 17, 2024

பாமக எம்.எல்.ஏ.வை பாராட்டிய பொன்முடி

image

விழுப்புரத்தில் நேற்று கூட்டுறவு வார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய பாமக எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அமைச்சர் பொன்முடி அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை விமர்சித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ. சிவக்குமாருக்கு பொன்முடி பாராட்டு தெரிவித்தது பேசு பொருளாகியுள்ளது.

News November 17, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!

image

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலரான இவர், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த தம்பத்திடம், அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News November 17, 2024

ஏழாம் நூற்றாண்டு சிலை கண்டெடுப்பு

image

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) மூத்ததேவி சிற்பம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. பலகை கல்லில், அழகிய தலை அலங்காரத்துடன் இந்தச் சிற்பத்தில் மூத்த தேவி மார்பு, வயிற்றுடன் கால்கள் தொங்கியபடி காட்சியளிக்கிறார்.

News November 17, 2024

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்த மருமகள் கைது

image

கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி சுவேதா தனது மாமியார் ரமணியுடன் வீட்டில் வசித்து வந்தார். ரமணி கடந்த அக்.30ஆம் தேதி சேலையில் தீப்பற்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மற்றொரு மகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்து சுவேதா கள்ளக்காதனுடன் சேர்ந்து ரமணியை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!