Villupuram

News March 9, 2025

விழுப்புரத்தில் தவெக பொதுச் செயலாளர் உரை

image

தமிழக வெற்றிக் கழகத்திற்கு யார் யாரோ மாற்றுக் கட்சியில் இருந்து வருகிறார்கள். அவருக்கு தான் பதவிகள் கொடுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆரம்பத்திலிருந்து யார் யார் தலைவரின் வளர்ச்சிக்கு பாடுபட்டு உழைத்தார்களோ அவர்களுக்கு தான் தலைவர் பதவி அளிப்பார். இதில் எந்த அச்சமும் தேவையில்லை என விழுப்புரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரையாற்றினார்.

News March 8, 2025

ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்றப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் இன்று (08.03.2025) நடைபெற்றது.

News March 8, 2025

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

image

வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், வளையாம்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று (08.03.2025) வழங்கி விழாப்பேருரையாற்றினார். உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அ.சிவா இருந்தார்.

News March 8, 2025

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் உரை

image

விழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உரையாற்றினார். அதில் ஒரு நாட்டின் மகளிர் முன்னேற்ற வளர்ச்சி வழங்கப்படும் பங்களிப்பு என்பது ஒரு சமூக வளர்ச்சிக்கான முதலீடு, சமூக வளர்ச்சிக்கான பாதை, அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வழிநடத்திச் செல்லும். அனைத்து மகளிர்களுக்கும் நாம் பெருமை சேர்ப்போம் வளமுடன் வாழ்த்துவோம் என உரையாற்றினார்.

News March 8, 2025

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அப்ரண்டீஸ் தேர்வு

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அப்ரண்டீஸ் தேர்வு நடைபெறுகிறது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் குறிப்பிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

வயிற்று வலியால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை

image

விழுப்புரம் அடுத்த பனங்குப்பத்தைச் சேர்ந்தவர் சுஜித் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் ( மார்ச் 07 ) நேற்று வயிற்று வலியால் அவதியடைந்து மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 8, 2025

திருட்டு வழக்கில் வெளி வந்தவர் போக்ஸோவில் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த 15 வயது மாணவி,வந்தவாசி அருகே அரசு பள்ளியில் +1 படிக்கிறார்.கடந்த, 24ம் தேதி சொந்த ஊருக்கு செல்வதாக விடுதி காப்பாளரிடம் கூறிவிட்டுச் சென்ற மாணவி,வீடு செல்லவில்லை.புகாரின் அடிப்படையில் உதயசங்கர் (22),மாணவியை காதலித்து கடத்திச் சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இவர் டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!