Villupuram

News November 19, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.11.2024 அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்துகொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் எல்லிஸ் சத்திரம் சாலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்களின் வாகனம் நிறுத்துவதற்கான இடம் சீர் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனிஇன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உட்பட பலர் உள்ளனர்.

News November 19, 2024

மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர் நியமனம்

image

கடலூர் தெற்கு மாவட்டத்தில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பி.பி. கே சித்தார்த்தன் அவர்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளராக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அவரின் பணி சிறக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரில் வாழ்த்தி வணங்கினார்கள்.

News November 19, 2024

விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

image

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ஹரிகிருஷ்ணன், எஸ்.வேல்மாறன், ஏ.நாகராஜன், ஆர்.தாண்டவராயன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News November 19, 2024

எல்லை பிரிப்பதில் பிரச்னை: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

image

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்தில் உள்ள அரியலுார் திருக்கை மற்றும் டட் நகர் ஊராட்சிகளின் எல்லை பிரிப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அரியலுார் திருக்கை மக்களின் கருத்தை கேட்காமல், பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ.அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

News November 19, 2024

பைக் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பலி

image

கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணி (30), குமார் (35), கார்த்தி (35). விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும், நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வேட்டவலத்தில் இருந்து கண்டாச்சிபுரம் நோக்கிச் சென்றனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மணி, குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கார்த்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News November 19, 2024

புதிய ட்ரெண்டை உருவாக்கிய TVK

image

தவெகவின் செஞ்சி தொகுதி பொறுப்பாளர் குணா சரவணன் தலைமையிலான ஒன்றிய நிர்வாகிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக மனு கொடுத்துள்ள புதிய வாக்காளர்களை வீடுத் தேடி சந்தித்துள்ளனர். நேற்று, புதிய வாக்காளர்களுக்கு மாலை அணிவித்து, பழம், இனிப்புகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய உறுப்பினர்களின் கவனத்தை தவெகவினர் ஈர்த்து வருவதோடு, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய ட்ரெண்டை உருவாக்கியுள்ளனர்.

News November 19, 2024

இதுவரை 117 போக்சோ வழக்குகள் பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 91 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 59 வழக்குகளும், கடந்த 2023ஆம் ஆண்டு 44 வழக்குகளும் என படிப்படியாக போக்சோ வழக்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு செப் மாதம் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், முன்னைக் காட்டிலும் தற்போது புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

News November 19, 2024

மாவட்டச் செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அதிமுக நிர்வாகிகள்

image

முகையூர் மேற்கு ஒன்றிய அதிமுக புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுருவை இன்று (நவம்பர் 18) சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News November 18, 2024

மாற்று பாதையில் இயக்கப்படும் பாலக்காடு ரயில்

image

வரும் நவம்பர் 19 மற்றும் 26 ஆகிய தினங்களில் வண்டி எண் 22652 பாலக்காடு இருந்து, MGR சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் மாற்று பாதையில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக செல்லும். மேலும் கரூர் மோகனுர் நாமக்கல் ராசிபுரம் சேலம் ஜோலார்பேட்டை அரக்கோணம் வழியாக செல்லாது. 

error: Content is protected !!