Villupuram

News September 11, 2025

விழுப்புரம்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 11, 2025

விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின் தடை

image

விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (செப்.11) காலை 9 – மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்நிறுத்தம் நடைபெற உள்ள பகுதிகள்:
▶️ கண்டமங்கலம்
▶️ வழுதாவூர்
▶️ பி.எஸ்.பாளையம்
▶️ நவமால்காப்பேரி
▶️ கலிங்கமலை
▶️ வெள்ளாழங்குப்பம்
▶️ கோண்டூர்
▶️ ஆழியூர்
▶️ பெரிய பாபுசமுத்திரம்
▶️ தாண்டவமூர்த்திகுப்பம்
▶️ பூசாரிப்பாளையம்
▶️ வி.பூதூர்

News September 11, 2025

விழுப்புரம்: நொடியில் நேர்ந்த சோகம்

image

விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News September 11, 2025

விழுப்புரத்தில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <>இங்கு கிளிக்<<>> செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 10, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 10, 2025

விழுப்புரம் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

விழுப்புரம் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. (SHARE)

News September 10, 2025

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

News September 10, 2025

விழுப்புரம்: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.<> இங்கு<<>> கிளிக் செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். கடைசி தேதி 17.09.2025 ஆகும். நாமக்கல் மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 10, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு ரூ.6 லட்சம் மானியம்

image

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க, ரூ.3-6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்கு, 20 – 45 வயதிற்குட்பட்ட, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் <>இங்கு<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், வங்கியில் ரூ.10 – 20 லட்சம் வரை கடன் பெற்று, சொந்தமாக உழவர் நல சேவை மையத்தை அமைக்கலாம். SHARE பண்ணுங்க

News September 10, 2025

விழுப்புரம்: கல் மண்டபங்கள் சிதைவு – பாதுகாக்க கோரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவ மற்றும் நாயக்கர் கால கல் மண்டபங்கள், போதிய பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. பனமலை, திருக்குணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்த மண்டபங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மாணவர்கள் விளையாடும் ஆபத்தான இடங்களாகவும் மாறியுள்ளன. எனவே, தொல்லியல் துறை இவற்றைச் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

error: Content is protected !!