Villupuram

News March 12, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (11.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 12, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாராந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பொருட்களின் விற்பனை தடுப்பது மற்றும் கண்காணித்திடுவது தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News March 11, 2025

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்

image

நேற்று ரஞ்சித் குமார் என்பவர் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி ஆம்னி பேருந்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு அருகில் அமர்ந்துள்ள பெண்ணிடம் ரஞ்சித் குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, பெண் பேருந்து ஓட்டினரிடம் புகார் அளிக்க, பேருந்து மயிலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த பெண்ணிடம் பெறப்பட்ட புகார் அடிப்படையில் ரஞ்சித் கைது செய்யப்பட்டார்.

News March 11, 2025

தமிழ் தெரிந்தால் அரசு வேலை! நாளையே கடைசி நாள்

image

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பல்வேறு பதவிகளில் மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும்.ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள்

News March 11, 2025

சாலை விபத்தில் வாலிபர் பலி

image

ஆனந்த் நேற்று முன் தினம் திண்டிவனத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, முன்னாள் கரும்பு லோடு ஏற்றிச் சென்ற லாரி பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். 

News March 11, 2025

ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி

image

கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன், 43 இவர் விக்கிரவாண்டில் கொள்முதல் செய்யும் பணியில் உள்ளார். கருணாகரன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் கருணாகரன் மற்றும் பைக் ஓட்டியவர் இருவரும் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 11, 2025

தோஷங்கள் நீக்கும் நாக கன்னியம்மன் திருக்கோயில்

image

விழுப்புரம் மாவட்டம் தும்பூரில் அமைந்துள்ளது நாக கன்னியம்மன் திருக்கோயில்.இங்கு 10 கி.மீ நீளம் பாம்பு சிலை உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமை காணும் பொங்கல் ஆகிய நாட்கள் விசேஷ நாட்களாகும்.இங்கு வந்து ராகு, கேது, தோஷம் உள்ளவர்கள் வேண்டினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். சேர் செய்யுங்கள்.

News March 11, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (10.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 10, 2025

செஞ்சியில் சதமடித்த வெயில்- இப்பொவேவா….!

image

செஞ்சி நகரத்தில் இன்று பிற்பகல் 102 டிகிரி வெயிலின் வெப்பம் பாதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில், இன்று முன்பைக் காட்டிலும் சற்று அதிகமாக சுட்டெரித்துள்ளது. இதனை தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பொழுதே இப்படி என்றால், இன்னும் கத்தரி வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். உங்கள் பகுதிகளில் வெயில் எப்படி இருக்கு?.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!