India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பழைய காலனியில் முதியவர் வீரமுத்து வாழ்ந்து வந்தார். இவர் நேற்று மாலை ஏரிப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு ஏரி தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<

விழுப்புரம் மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<

விழுப்புரம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12-ம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 – ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்தம் 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரத்தில் பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டம்பாக்கம், கண்டியமடை, மரகதபுரம் ஊழியர் நகர், கண்டமானடி, காவலர் குடியிருப்பு, பிடாகம். பி.குச்சிப்பாளையம், கோவிந்தபுரம், நெற்குணம், ஒருகோடி, எம்.ஜி.,புரம் ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிப்பு.

விழுப்புரத்தில் நேற்று வரை இப்பணிகள் 72 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள வாக்காளர்கள் கணக்கீட்டு படிவம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் 28ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், வாக்காளர்கள் 2 தினங்களுக்குள் கணக்கீட்டு படிவங்களை, தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்: வேப்பேரியில் சந்தேகத்திற்குரிய 3 பேர் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரித்த போலீசார், ரமேஷ்குமார், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை கைது செய்தனர். பகல் நேரங்களில் புவனேஸ்வரி வீடு வீடாக சென்று நோட்டமிடுவதும், இரவு நேரங்களில் மற்ற இருவர் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது.

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார், திருப்பாச்சனுார் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.29) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதனால், பெரியசெவலை, துலக்கம்பட்டு, கூவாகம், சேத்துார், அமாவாசைபாளையம், தி.கொளத்துார், சிறுமதுரை, பூசாரிப்பாளையம், ஒட்டனந்தல், அண்டராயநல்லுார், கொண்டசமுத்திரம், அரசமங்கலம், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு சுற்று பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
Sorry, no posts matched your criteria.