India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சிவா என்பவர் நேற்று அக்.28 (செவ்வாய்க்கிழமை) கடத்தப்பட்ட வழக்கில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசமூர்த்தி, வைரமுத்து ஆகிய இருவரை விழுப்புரம் மாவட்ட போலீசார் இன்று அக்.29 (புதன்கிழமை) கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.29) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் கடந்த 10 நாட்களாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் கடந்த 10 நாட்களில் 1841 புதுச்சேரி மது பாட்டில்கள், 285 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்29) தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., உங்களுக்கு அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ, பாலியல் சீண்டல், அணுகுதல், வன்முறை, பின் தொடர்தல் போன்ற எவ்வித பிரச்னைகளை சந்தித்தாலும் உடனே 181 எனும் கட்டணமில்லா எண்ணை அழைக்கவும். உங்களுக்கான உடனடி உதவி கிடைக்கும். மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த திட்டங்களை தெரிந்துகொள்ளவும் இந்த எண்ணை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்று வருகின்றன அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அடுத்த ஆக்கிரமித்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிற்பங்களும் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திக்குப்பம் பகுதிகளில் இன்று (ஆக.28) 10க்கும் மேற்பட்ட முதியோர்களையும், பெண்களையும் தெரு நாய்கள் கடித்தன. இச்சம்பவத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்டோர் வேதனையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.