India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 6380281341 என்ற வேலூர் மாவட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் புகார் கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (SI) தேர்வுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளார். மேலும், தகவல்களுக்கு தொலைபேசி எண்கள் 0416 2290042 மற்றும் 9499055896 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில், நேற்று (ஏப்ரல் 21) 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூரில் 103.1 டிகிரியும், வேலூர் மாவட்டத்தில் 101.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தினமும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் வெயில் பதிவாகி வருவதால், வேலூர் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர், குளிர்பானங்களை அதிகம் குடியுங்கள். முடிந்தளவுக்கு மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்திடுங்கள்.
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு அரசு சார்பில் இளைஞர் விருது வழங்கி வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த விருதுக்கு 15 முதல் 35 வயது வரையிலான ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி கடைசி நாளாகும் என வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படிவேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடுஇன்று (ஏப்ரல்- 21) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானதகும் இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது அதனால் இங்குள்ள சிவபெருமாளுக்கு ஜலகண்டேஸ்வரர் என்கிற பெயரும் உள்ளது. காசிக்கு சென்று வந்தால் அமையும் மாற்றத்தை போல இந்த கோயிலுக்கு வந்து வேண்டி சென்றால் புதிய வழிகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவோர்களுக்கு ஷேர் பண்ணுங்க
வேலூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட அ.மோட்டூர் கிராமத்தில், 20ஆம் ஆண்டு எருது விடும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருது நிகழ்ச்சியைக் காண அகரம் கிராமத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் வந்தனர். காளை முட்டியதில் பலத்த காயமடைந்த பரந்தாமன் (32) என்பவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வேலூரைச் சேர்ந்த பிரசாத் (27) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 குழந்தை உள்ள நிலையில், 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி அந்த சிறுமி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், பிரசாத் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, குகையில் பதுங்கியிருந்த பிரசாத், சூர்யா, விஜய் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.