Vellore

News August 16, 2025

வேலூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 9445000417, 9445463333) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 16, 2025

வேலூர் முருகர் கோயிகளில் 500 போலீசார் பாதுகாப்பு

image

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்நிலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தீர்த்தகிரி, பாலமதி, மகாதேவமலை, வள்ளிமலை உள்ளிட்ட 25 முக்கிய முருகர் கோயில்களில் தலா 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 16, 2025

வேலூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 16, 2025

வேலூரில் புயலை கிளப்பிய EPS

image

வேலூரில் பரப்புரையில் ஈடுப்பட எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ‘காப்பி-பேஸ்ட்’ செய்து புதுப்பெயர் சூட்டி மீண்டும் வெளியிட்டு வருகிறார். அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்ற ஒன்றும் இல்லை. ஆட்சி முடியும் தருவாயில், விளம்பர நோக்கத்திற்காக தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தேர்தலுக்கு முன் அரசியல் பயன்பெறும் முயற்சி” என விமர்சித்தார்.

News August 16, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி நேற்று (ஆக.15) இரவு முதல் இன்று(ஆக.16) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்காள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 15, 2025

ஆம்புலன்ஸ் சேவைக்கு நற்சான்றிதழ்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 79 வது சுதந்திர விழா மாவட்ட கலெக்டர் சிவ சௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா முன்னிலையில் கொண்டாடப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சிறப்பாக பணி புரிந்ததின் காரணத்திற்காக நற்சான்றிதழ் வழங்கப்பட்டது

News August 15, 2025

வேலூர் மாவட்டம் முழுவதும் 90 மது பாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்கும் மாவட்டம் முழுவதும் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் இன்று (ஆகஸ்ட் 15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது மதுவிலக்கு வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

வேலூரில் வேகமாக பரவும் உயிர்கொல்லி நோய்: உஷார்

image

கியூலெக்ஸ் எனப்படும் கொசுவால் பரவும் மனித உயிரை கொல்லும் மோசமான நோய்களில் ஒன்றான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேலூரில் அதிகளவில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தடுக்க வேலூரைச் சேர்ந்த 5-15 வயது குழந்தைகளுக்கு செப்.12 வரை, அங்கன்வாடி குழந்தைகளுக்கு செப்.14-அக்.12 வரை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அக்.13-நவ.,12 வரை தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. *இந்நோய் குறித்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*

News August 15, 2025

வேலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை என அடுத்த 45 நாட்களில் வேலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடம், நேரம் குறித்த விவரங்களை <>இங்கு கிளிக் செய்து<<>> தெரிந்துகொள்ளலாம். *உதவிக்கரமான இத்தகவலை அனைவருக்கும் பகிரவும். கண்டிப்பாக உதவும்*

News August 15, 2025

வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய கலெக்டர்!

image

இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி, இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!