Vellore

News December 10, 2024

இரவு ரோந்து பணி: போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (டிசம்பர் 10.12.2024) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News December 10, 2024

 ஃ பெஞ்சல் புயலால் 159.19 ஹெக்டேர் நெற்பயிர் சேதம்

image

வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் 253 விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டிருந்தனர். இதில்,  அறுவடைக்கு தயாராக இருந்த 159.19 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 10, 2024

விரிஞ்சிபுரம் சிம்மக்குளத்தில் நீராட முன்பதிவு ஆரம்பம்

image

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா முன்னிட்டு சிம்மகுளம் வருகிற டிச 15ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட உள்ளது. சிம்ம குளத்தில் நீராடும் பெண்கள் இன்று (டிசம்பர் 10) முதல் 14-ந் தேதி மாலை 4 மணி வரை https://hrce.tn.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் கோவில் அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என கோவில் செயல் அலுவலர் பிரியா தெரிவித்துள்ளார்.

News December 10, 2024

வேலூர் எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு எருது விடும் விழா தொடர்பாக தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், வருகிற டிசம்பர் 12ஆம் தேதி மாலை 03 மணியளவில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எருது விடும் விழா நடைபெறவுள்ள கிராமங்களில் இருந்து விழா குழுவினர்களை கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி

image

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate கூடைப்பந்தாட்டப் போட்டி நாளை (டிச 10) GAACW, வாலஜா பெண்கள் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகள் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டியானது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்  தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 9, 2024

வேலூர் மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தல்

image

வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் ஆகிய தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே,  பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு கழுவ வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவுறுத்தியுள்ளார். 

News December 8, 2024

வேலூர் மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்கள் வழங்கல் 

image

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று காலை அனுப்பி வைக்கபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News December 8, 2024

வேலூர் அருகே ரயில் மோதி மரணம் 

image

விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதிக்கு செல்லும் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது நேற்றிரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார். இறந்தவர் யார்? இவர் ரயிலில் பயணம் செய்தவரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 8, 2024

கல்லூரி மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி!

image

வேலூர்,திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான intercollegiate ஹாக்கி போட்டி நாளை (09.12.24) GHSS, பள்ளி, காரணம்பட்டில் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவிகள் மட்டும் இப்போட்டியில் பங்கு பெறலாம். இந்த போட்டி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்  தலைமையில் நடைபெறும்.

News December 8, 2024

கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் லட்சுமி அம்பாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது வீட்டின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில், இவரது பசுமாடு இன்று (டிசம்பர் 7) தவறி விழுந்துள்ளது. இதையடுத்து மூர்த்தி குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி கிணற்றில் இருந்து பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!