India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்பாடி அடுத்த மாதாண்டகுப்பம் ஊராட்சி, காட்டூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 13) பார்வையிட்டு பயனாளிகளிடம் வீட்டிற்க்கான தொகை மற்றும் சிமெண்ட் மூட்டைகள் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டனர்.
வேலுார் மாவட்டம் ,வேலூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஆட்சியர் தலைமையில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வேலூர் அடுத்த சோழவரம் கிராமம், ஏ.ஏ.திருமண மண்டபத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 5 வயது முதல் 13 வயது வரை மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வருகிற டிசம்பர் 15-ம் தேதி வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஊரிஸ் மேல்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தொலைபேசி எண்044 27269148 அல்லது 9443429521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 3வது புதன்கிழமை தாலுகா அளவில் கலெக்டர் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வருகிற (டிசம்பர் 18) வேலூர் வட்டத்தில் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 200 போலீசாரும், 2வது கட்டமாக 350 போலீசாரும், 3வது கட்டமாக நேற்று காலை மேலும் 30 போலீசார் திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றனர். தீபத் திருவிழாவுக்காக வேலூர் மாவட்டத்திலிருந்து இதுவரை 580 போலீசார் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் கனமழை காரணமாக வேலூரில் இன்று (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை தீப திருவிழா முன்னிட்டு வேலூர் போக்குவரத்து மண்டலம் சார்பில் இன்று (டிசம்பர் 12) மாலை முதல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி வேலூரில் இருந்து 80 சிறப்பு பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 40 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்களும் என மொத்தம் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி நாளை (டிசம்பர் 12) கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சேர்க்காடில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவருமான ஏ.பி.நந்தகுமார் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு, பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் கணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சம்பத் (58). இவர் கடந்த 2020-ம் ஆண்டு வேலூர் பலவன்சாத்து பகுதியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மகளிர் போலீசார் சம்பத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இறுதி விசாரணை முடிந்து சம்பத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.