Vellore

News January 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இன்று (09.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி தகவல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஜனவரி 9) நடத்திய சோதனையில் 25 மது பாட்டில்கள், 100 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இது தொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2019 முதல் 31.12.2019 வரை பதிவு செய்து தற்போது ஐந்தாண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் நடப்பு காலாண்டிற்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

இலவச வேட்டி, சேலைகளின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் டெக்ஸ்டைல் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 9) பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர்

image

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஜனவரி 9) திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாடினார். பிளஸ்-2 அரையாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு புத்தகம் வழங்கி பாராட்டினார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஏரிகுத்தி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (09.01.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் தூய்மையாக பராமரிக்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

News January 9, 2025

நாளை பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

image

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை (ஜனவரி 9) காலை 9:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 9, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று ( ஜன.,8 )நடத்திய சோதனையில், 83 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 03 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News January 8, 2025

கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

கே.வி. குப்பம் அடுத்த நாகல் கிராமத்தைச் சேர்ந்த விட்டல் குமார் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ் குமார், பாலா சேட், தரணி குமார், கமல் தாசன், ஆகியோர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று குண்டர் சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கும் உத்தரவு ஆணையை பிறப்பித்தார்.

News January 8, 2025

போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் மீது வழக்கு பதிவு

image

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் 600 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 600 பேர் மீது வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!