Vellore

News January 15, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில், பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2025

வேலூர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 20 சிறப்பு பேருந்துகள்

image

காணும் பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபுரம், அமிர்தி, மோர்தானா அணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கு நாளை 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீபுரம், அமிர்திக்கும் குடியாத்தம் பஸ்நிலையத்தில் இருந்து மோர்தானா அணைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என வேலூர் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 15, 2025

பேரணாம்பட்டு விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு முத்துகூர் கிராமத்தில் நேற்றிரவு விவசாய நிலத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னங்கன்றுகளை மிதித்து சேதப்படுத்தின. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

News January 15, 2025

ஒரே நாளில் ரூ.7.80 கோடிக்கு மது விற்பனை

image

வேலூர், திருப்பத்தூரில் 115 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி, டாஸ்மாக் கடை விடுமுறை என்பதால் நேற்று ஒரே நாளில் ரூ.7.80 கோடிக்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பொங்கல் திருவிழாவில் ரூ.5.50 கோடி மது விற்பனையானது. இந்த ஆண்டு அது ரூ.2.30 கோடியாக அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையை விட விற்பனை ஆகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 15, 2025

வேலூர் மாவட்டத்தில் இறைச்சி விற்பனைக்கு தடை

image

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இன்று அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய தினம் ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது. இறைச்சி கடைகளை திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் மீது பொது சுகாதாரச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News January 15, 2025

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று ஜன.15 வேலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 14, 2025

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு நாளை (ஜனவரி 15) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.

News January 14, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜன. 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News January 14, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா? Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள், <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அதில் உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்து, இப்போதே கூடுதல் வருவாயை ஈட்ட தொடங்குங்கள். மேலும் விவரங்களுக்கு 9542922022 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News January 14, 2025

அணைக்கட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு

image

அணைக்கட்டு புதூர் கிராமத்தை சேர்ந்த கவூர்கான் மினிவேன் டிரைவர். இவர் கடந்த 11-ந் தேதி குடும்பத்துடன் வெளியே சென்றார்.  பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 4 சவரன் நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டுபோய் இருந்தது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!