Vellore

News October 16, 2025

வேலூர்: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News October 16, 2025

வேலூர்: திருமணமான 6 மாதத்திலேயே வாலிபர் தற்கொலை!

image

குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (25), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி வித்யா. திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜித் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 16, 2025

வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

வேலூர் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பத்தை www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

வேலூர்: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

வேலூர் மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா<<>>’ ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 16, 2025

வேலூர்: தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா?

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆன்லைன் மூலமாக குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக வரும் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். மேலும் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ, இலவச எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கும் படி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.

News October 16, 2025

வேலூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்-15) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 102 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணி விவரங்கள்

image

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (அக்.15) இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறும் இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது. வேலூர், காட்பாடி, காட்பாடி, அனைகட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களின் பாதுகாப்புக்காக இரவு முழுவதும் சிறப்பு ரோந்துப் பணிகள் நடைபெறும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

News October 15, 2025

குடியாத்தம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (அக்.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

News October 15, 2025

வேலூர் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது

image

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இ பிரிவில் ஏழுமலை பணியாற்றி வந்துள்ளார். வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன பாதுகாவலராக பணி செய்து ஓய்வு பெற்ற ஜெயவேல் உயிரிழந்த நிலையில் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏழுமலை ஜெயவேலின் மனைவியிடம் 10 ஆயிரம் லஞ்சமாக பெறும்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டார். ஏழுமலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!