India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 26) அதிகபட்சமாக 101.5°F வெயில் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்திருந்த வெப்பம் மீண்டும் அதிகரித்து, பகலில் அனல் காற்று வீசுகிறது. இது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் இது 5ஆவது முறையாக வெப்பம் 100°F கடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டவுன் ஹாலில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் சங்கமம் கலை திருவிழா நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 26) மாலை 6:00 மணி அளவில் துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் (மார்ச் 28 ) தொடங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,984 மாணவர்கள், 9,105 மாணவிகள் மொத்தம் 18,089 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு எழுதுவதற்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <
வேலூர் மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பேரணாம்பட்டு தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயபிரகாஷ், பதவி உயர்வு பெற்று, இலங்கை தமிழர் மற்றும் மறுவாழ்வு பிரிவு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய சுஜாதா, கலால் மேற்பார்வையாளராகவும், இதேபோல் மாவட்டம் முழுவதும் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ‘நிதிஆப்கே நிகட் 2.0’ எனும் முகாம் நாளை (மார்ச் 27) வேலூர் ஜி.பி.எச். சாலையிலுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களின் முதலாளிகள், தொழிலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.எச்.வார்சி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூர் மாவட்ட பிரிவு சார்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டு அரங்கம் காட்பாடியில் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 85085 78720, 74017 03483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில் ஏப்ரல் 12,13 ஆகிய தேதிகளில் வழிகாட்டி உயர்கல்வி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் 10,12 வகுப்பு முடித்த மாணவர்கள் எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம் என்று ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த அறிய வாய்ப்பை வேலூர் மாவட்ட மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஐடி வேந்தர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு கலந்து கொள்ளனர்.
தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யாதவர்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளில் ஆதார் அட்டையுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.