India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (ஏப்.2) சேண்பாக்கம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை கடக்கும்போது பைக் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோடை காலத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 13 மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படும். இதில், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதுவரை 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
பஞ்சாப்பில் சீக்கியர்கள் வழிபடும் பொற்கோவில் உள்ளதை போல தமிழ்நாட்டின் தங்கக்கோவிலாக வேலூரில் லட்சுமி நாராயணி கோயில் உள்ளது. முழுவதுமே தங்கத்தால் ஆன இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிளாக அறியப்படுகிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் நின்று லக்ஷ்மியை தரிசனம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்ட சிறப்பை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வரும் ஏப்.21-ஆம் தேதிக்குள் கோடி கம்பங்களை அகற்ற வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் காட்பாடி அடுத்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 3 புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவரப் பட்டுள்ளன.வரும் கல்வியாண்டு (2025-26) முதல் புதியதாக 3 துறைகள் (1) உயிரிவேதியியல், (2) எம்.பி.ஏ. (3.) நூலக அறிவியல் போன்ற முதுகலை பட்டய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன என துணை வேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குடை, ரெயின் கோர்ட்டை கொண்டு செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் லோகநாதன், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனது உயர் அதிகாரியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதனால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்கள் பெயரில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யும்போது பதிவுக்கட்டணம் 1 சதவீதம் கட்டணம் குறைப்பு திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் வேலப்பாடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பத்மபிரியா பெண்களுக்கு பத்திர பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.