Vellore

News April 28, 2025

வேலூர் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

image

▶️வேலூர் மாவட்ட ஆட்சியர்-சுப்புலெட்சுமி (0416-2252345)

▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- மதிவாணன் (0416-2256802)

▶️மாவட்ட வருவாய் அலுவலர்- மாலதி (0416-2253502)

▶️இணை இயக்குனர் /திட்ட அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை- செந்தில் குமரன் (0416-2253177)

▶️மாநகராட்சி ஆணையர்-.ஜானகி இரவீந்திரன் (0416-2220578)

▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)- முத்தையன் ( 0416-2253034)

ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்

News April 28, 2025

தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

image

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <>விண்ணப்பங்களை<<>> மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் நாளை மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

காட்பாடி ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

மருத்துவ மாணவரிடம் ரூ.11 லட்சம் மோசடி

image

வேலூர், தனியார் மருத்துவ கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலிகிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேரம் மூலம் சம்பாதிக்கலாம் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி பல தவணைகளாக மொத்தம் ரூ11 லட்சம் முதலீடு செய்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும் என கூறிய போது ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர் போலீசில் புகார் அளித்தார்.

News April 28, 2025

வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 27, 2025

சேம்பாக்கம்: திருட முயன்றவர்களுக்கு தர்மஅடி

image

வேலூர், சேம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தாமோதரன் என்ற இருவரும் வாணியம்பாடி மாட்டுச் சந்தையில் ஏப்ரல் 26 அன்று இருசக்கர வாகனம் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக இருவர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்

image

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்

News April 27, 2025

வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

image

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!