India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் 17 வயது சிறுமியை கடந்தாண்டு வேலூரில் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நேற்று சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், அப்துல்கரீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், தொரப்பாடியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி முருகேசன், 49. இவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் , குடிபோதையில் வீட்டிற்கு வந்தவர், மகன் மற்றும் மனைவியை கடுமையாக தாக்கினார். இதனால் அவரது மனைவி, போலீஸ் அவசர எண், 100க்கு போன் செய்தார். இதைப் பார்த்த முருகேசன், போலீஸ் விசாரணைக்கு பயந்து, வீட்டுக்குள் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் ரோந்து பணிக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் சற்று முன் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்லும் அனைவரும் ஏதேனும் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் இந்த <
வேலூர் மேட்டு இடையம்பட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலின் பேரில்,பாகாயம் போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கார்த்தி (44), சுரேஷ் (42), ஜெகதீசன் (33), ஜெய் சங்கர் (54), ராஜி (50), ரவி (50), தினேஷ் குமார் (30), முத்து (46), நாராயணன் (50), சந்தோஷ் (29), பாபு (68), சத்தியமூர்த்தி (30), செல்வம் (43) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.60 ஆயிரம், 5 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் சூராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (20). இவர் நேற்று அவரது பைக்கில் வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதற்காக சூராளூர் கூட்டு சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ எதிர்பாராத விதமாக விஜய் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. படுகாயமடைந்த விஜய்யை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார்.
கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்த சிவனேசன், நவீன் குமார், கோகுல் கிருஷ்ணன் & ஆதி ஆகிய மாணவர்கள் வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் , காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலு தூக்கும் போட்டியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை கல்லூரியின் தலைவர், செயலர் , முதல்வர் & உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் பாராட்டினர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 26 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்
Sorry, no posts matched your criteria.