Vellore

News March 7, 2025

வேலூரில் 3 எஸ்ஐ உட்பட 8 போலீசார் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 8 போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார் அதன்படி குடியாத்தம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பரதராமி போலீஸ் நிலையத்திற்கும், பரதராமி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ லெனின் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 7, 2025

காட்பாடி அருகே 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது

image

காட்பாடி அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன். கடந்த 1-ந் தேதி அந்தப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நேற்று சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.

News March 7, 2025

வேலூரில் பிரபல ரவுடி கைது

image

மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மோகன் என்பவருடன் அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில், நேற்று (மார்.6) குணா போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 6, 2025

வேலூர் மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக இன்று (மார்ச் 6) 100.6°F டிகிரி பாரன்ஹீட் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 6, 2025

வேலூர் அருகே லாரி மீது மோதி கார் விபத்து 

image

பெங்களூருவைச் சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் அவரது மகள் இருவரும் இன்று சென்னைக்கு காரில் சென்றனர். அப்போது, வேலூர் சேண்பாக்கம் மேம்பாலத்தில், முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஜேம்ஸ் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 6, 2025

குடியாத்தம் கோயில் அர்ச்சகர் போக்சோவில் கைது

image

குடியாத்தம் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) இவர் விநாயகர் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். அதே பகுதியை பகுதியை சேர்ந்த12 வயது சிறுமியிடம் கோபாலகிருஷ்ணன் அடிக்கடி சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

News March 6, 2025

ஜெர்மனி நாட்டில் பணிபுரிய விண்ணபிக்கலாம்

image

ஜெர்மன் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி புரிவதற்கு 6 மாதங்கள் பணி அனுபவம் பெற்ற 35 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. இடைத்தரகர், ஏஜெண்டுகளை நம்ப வேண்டாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், வரும் 15ஆம் தேதிக்குள் <>www.omcmanpower.tn.gov.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News March 6, 2025

வேலூரின் பொக்கிஷம் – வேலூர் கோட்டை

image

வேலூரில் அமைந்துள்ள முக்கிய தொல்லியல் சின்னம் வேலூா் கோட்டையாகும். இக்கோட்டையும் அதனுள் அமைந்துள்ள கட்டிடப்பகுதிகளும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இக்கோட்டை கி.பி.1526 முதல் 1595-ல் வேலூா் பகுதியை ஆட்சிச் செய்த சின்னபொம்மு நாயக்கராலும், அவரின் சகோதரர்களாலும் கட்டப்பட்டதாகும். இங்கு இந்து, இஸ்லாம், கிறித்துவர் ஆகியோரின் வழிபாடு தளங்கள் ஒன்றாக அமைத்திருப்பது இதன் சிறப்பு

News March 6, 2025

அரசு மானியத்துடன் கடனுதவி – கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் கைவினை திட்டத்தின்கீழ் 264 நபர்களுக்கு ரூ.1.11 கோடி அரசு மானியத்துடன் ரூ.5.99 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தை சார்ந்த கலை மற்றும் கைவினை தொழில்புரிவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

image

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!