Vellore

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்.

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

image

ஒடுகத்தூர் அருகே 17 வயது சிறுமியை, அதேப்பகுதியை சேர்ந்த திருமால் (வயது 25) 9 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். 4 மாத கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருமால் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 8, 2025

வேலூரில் உதித்த இந்தியாவின் குரல்!

image

இந்தியாவின் மிக பிரபலமான பிண்ணனி பாடகியான வாணி ஜெயராம் பிறந்த ஊர் வேலூர். கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கிய இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார்.நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதி கண்ணம்மா போன்ற பாடல் மிகவும் பிரபலமாவை. பல விருதுக்கு சொந்தக்காரரான இவர் தனது 77வது வயதில் உயிரிழந்தார்.

News March 7, 2025

கள்ளச்சாராயம் விற்பனை; குண்டர் சட்டத்தில் கைது

image

பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆசிர்வாதம் வ/38, என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார். பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று ஆசிர்வாதத்தை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

News March 7, 2025

வேலூர் கிராம பகுதி மக்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 2024-2025 நிதியாண்டிற்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை வசூல் செய்ய அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை தாமதமின்றி செலுத்துமாறு மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

வேலூர் மகளிர் தினம் முன்னிட்டு மாரத்தான் போட்டி

image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி வருகிற (மார்ச் 8) காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. வேலூர் கிரீன் சர்க்கிளில் தொடங்கி காட்பாடி வரை நடைபெற உள்ள இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார்.  இதில் மகளிர் அணைவரும் கலந்து கொள்ளலாம் அனுமதி இலவசம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News March 7, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வருகிற மார்ச் 10-தேதி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. என இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி (மார்ச் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0416-2290348 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!