India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்றவற்றிற்கான வரைபட அங்கிகாரம் இணைய தளம் மூலம் ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருமணிக்குன்றம் அருகே உள்ளது ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபட்டால் பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்திற்கான 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுஜாதா தாக்கல் செய்தார்.அப்பட்ஜெட்டில் வேலூரில் அனைத்து வார்டுகளிலும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றும் பள்ளிகளின் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்,அம்மா உணவகம் மீண்டும் சீரமைக்கப்படும் என்று தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் ஆண் சடலம் உள்ளதாக அப்பகுதியில் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மதுபோதையில் தவறி விழுந்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.
வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று வேலூர் கோட்டை. இக்கோட்டையானது கி.பி.1526-கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. உங்க ஊர் பெருமைகளை அறிய ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வருகின்ற மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை 4 நாட்கள் குடிநீர் வழங்க இயலாது. எனவே பொதுமக்கள் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 11) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்டத்தில் 13 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளார். அதன்படி அணைக்கட்டு தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, வேலூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், கலெக்டர் அலுவலக கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் பாலசந்தர், வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும் இதேபோல் மாவட்டம் முழுவதும் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூரில் பார்க்கவேண்டிய 5 சிறந்த இடங்கள்: 1. வேலூர் கோட்டை, 2. ஸ்ரீபுரம் பொற்கோயில், 3. அமிர்தி விலங்கியல் பூங்கா, 4. ரத்னகிரி முருகன் கோயில், 5. பெரியார் பூங்கா. இங்க விசிட் பண்ணிருக்கீங்களா?. இது தவிர வேறு என்ன இடங்கள் உள்ளன என்பதை கமெண்டில் பதிவிட்டு, தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த <
Sorry, no posts matched your criteria.