India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி ராஜகுமாரி (29). ராஜகுமாரிக்கு கடந்த சில மாதங்களாக தீராத நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த அவர் கடந்த 21-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர், மேல்வல்லத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம். இலகிய மலையின் மேல் அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் சிவபெருமான் கால்பதித்து லிங்கமாகக் காட்சி அருள்பாலிக்கிறார். திருமணமாகி வெகு நாள்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டித் தொட்டில் கட்டி வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்க மே 15 வரை மட்டுமே அவகாசம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு ரூ.2,000 அபராதமும், தொழிற்சாலைகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். எனவே அணைத்து கல்வி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள்சங்கங்கள் தமிழ் பெயா் பலகை நூறு சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தை தவிா்க்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’<
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளர், 6 குறு அங்கன்வாடி பணியாளர், 163 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <
பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல்.22) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஷாம்நாத் (24), லேப் டெக்னிஷியன். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. காதலர்களிடையே ஏற்பட்ட தகராறில் அந்த பெண், இவரை விட்டு விலகி சென்றுள்ளார். காதல் தோல்வியால் விரக்தியடைந்த ஷாம்நாத், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமி நேற்று அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமியின் உறவினரான சீமான் (30) என்பவருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது. புகார் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30 வயதிற்குட்பட்ட டிப்ளமா, எலக்ட்ரானிக், கம்யூனிகேஷன், இன்ஜினீயரிங் அல்லது பயோ மெடிக்கல் இஞ்ஜினியரிங் படித்த இளைஞர்கள் clin.cmcvellore.ac.in என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30ஆம் தேதி ஆகும். ஷேர் செய்யங்கள்
Sorry, no posts matched your criteria.