Vellore

News March 15, 2025

திருமண தடை நீங்க இங்கே சொல்லுங்கள் 

image

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் திருக்கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக திருமணத்தடை , புதிய வீடு கட்டுதல், தொழில் முன்னேற மற்றும் கல்வியில் முன்னேற தேங்காயை கோயிலில் கட்டி வைத்தால் கண்டிப்பாக நிறைவேறும். எனவே கோவில்களில் அதிக அளவு தேங்காய் கட்டி முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

News March 15, 2025

வேலூர் எஸ்பி தலைமையில் குற்ற ஆய்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (மார்ச் 15) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன்  தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள்  மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 15, 2025

வேலூரில் உச்சத்தில் வெயில்

image

தமிழ்நாட்டில் வெயில் நகரமான வேலூரில் கோடை துவங்கும் முன்பே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.இந்த மார்ச் மாத துவக்கத்திலேயே 95 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரித்தது 101.4 டிகிரியை கடந்து உள்ளது.சில தினங்களுக்கு முன்பு மழை பெய்த போதும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. வெயில் காலத்தின் தொடக்கமே தாக்கம் அதிகமாக இருப்பதால் மற்ற நாட்களில் நிலை என்ன என மக்கள் அச்சம்.

News March 15, 2025

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை

image

வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அசோக்குமார் (29) இவர் கடந்த 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தனர். வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்த வழக்கில் அசோக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் நேற்று (மார்ச்.14) உத்தரவிட்டார்.

News March 14, 2025

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “திட்டம் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டத்தில் வருகிற மார்ச் 19- ம் தேதி நடைபெற உள்ளது .எனவே பொதுமக்கள் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 14) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

பட்ஜெட்: அதிவேக ரயில் போக்குவரத்தை உருவாக்க ஆய்வு

image

விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். சென்னை – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் ஆகிய வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

News March 14, 2025

வேலூர் மக்களின் வீரத்தை பறைசாற்றும் மணிக்கூண்டு

image

வேலூர் மாவட்டம் லாங்கு பஜாரில் வீற்றிருக்கும் மணிக்கூண்டானது கி.பி., 1928-ல் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டது. இந்த மணிக்கூண்டு உள்ள கல்வெட்டில் “இந்த ஊரிலிருந்து 1914-18-ல் நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் மணிகூண்டும் வேலூர் மாவட்ட மக்களின் வீரத்தை இன்றளவும் பிரதிபலித்து வருகிறது.

News March 14, 2025

வேலூர் அருகே துப்பாக்கிச் சூடு

image

காட்பாடி அருகே காந்திநகரில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் துப்பாக்கி குண்டுகளை அகற்றினர். தகவல் அறிந்த காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரித்த பொழுது நிதி வசூலில் ஏற்பட்ட தகராறின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரியவந்துள்ளது.

News March 13, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!