India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற மார்ச் 21-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள தனியார் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் எஸ்பி மதிவாணனிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரிக்க மகளிர் போலீசாருக்கு எஸ்பி அளித்த உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி துணை முதல்வர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன்.இவர் அந்தக் கல்லூரியில் பணியாற்றும் 37 வயதுடைய பெண் கவுரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அன்பழகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். <
வேலூர் என்ற பெயர், வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் வந்திருக்கலாம் எனவும் மழை இல்லாத கோடையில் வேலால் (கடப்பாறையால்) தோண்டிய கிணற்றிலிருந்து இவ்வூர் மக்கள் தண்ணீர் பெற்றதால் இந்த பெயர் வந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிலர் வேலூர் என்ற பெயர் வேலுக்கு உரிய முருகன் தோன்றிய ஊர் என்பதாலும் வந்திருக்கலாம் என்கின்றனர். நீங்கள் தெரிந்து கொண்டது போல மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்ப அலைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை வழங்க 5 தனி படுக்கைகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும் சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவக் குழு ஏற்படுத்த வேண்டும். வேலூா் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி (49).இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல்துறையில் நேற்று (மார்ச் 17) புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மட்டன் பாயா வேலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு வகையாகும். இது மட்டன் கால் மற்றும் எலும்புகளை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான குழம்பு வகை ஆகும்.வேலூர் நகரில் பல இடங்களில் கிடைக்கும் இந்த பாயா எலும்புக்கு வலு சேர்க்கும். சப்பாத்தி, இடியப்பம் அல்லது பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடலாம். இதுவரை நீங்கள் சாப்பிட்டதில்லை என்றால் இதை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து சாப்பிட அழைத்து செல்லுங்கள்.
வேலூர் எஸ்.பி. மதிவாணன் சென்ற காவல்துறை வாகனம் மீது மதுபோதையில் பைக்கை ஓட்டி வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய சிறைக் காவலர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மார்ச்.14ஆம் தேதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு மதிவாணன் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேலூர் வட்டார ஆட்சியர் அலுவலகம் அருகே சிக்னலில் நின்ற கார் மீது பைக் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.