India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்.24) காவல் ஆய்வாளரின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 27 மதுபாட்டில்கள்,2700 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள்,2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல முக்கிய மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளியது,சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். உச்சநீதிமன்ற உத்தரவின் படி வேலூர் உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.24) அதிகபட்ச வெயிலாக 106.9°F வெயில் பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலூர் சி.எம்.சி மருத்துமனை எதிரே மின்மாற்றியில் நேற்று ( ஏப்.24) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொது மக்கள் மின்சார வாரியம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வெயில் காரணமாக மின்மாற்றியில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மாநகராட்சி வார்டு எண் 21 சத்துவாச்சாரி பகுதி 3 பூங்கா நகர், அப்துல்கலாம் தெரு, அதியமான் தெரு ஆகிய தெருக்களில் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தார் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா. உடன் மாமன்ற உறுப்பினர் சக்கரவர்த்தி, சுகாதார அலுவலர் சிவகுமார் இருந்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்ராவரம் ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு. இதில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள், திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி இன்று (ஏப்ரல் 24) வேலூரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி நேற்று (ஏப்ரல் 23) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 23) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 78 மதுபாட்டில்கள், 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 8 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.