Vellore

News March 31, 2024

குடியாத்தம் மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். நேற்று (மார்ச் 30) இவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி வீட்டில் இருந்த பிரிட்ஜ், பேன், மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இதையடுத்து அப்பகுதி மக்கள் குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

News March 31, 2024

வேலூருக்கு 2 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்

image

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 31 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சம் நோட்டாவுடன் சேர்த்து 16 சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். எனவே கூடுதலாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (பேலட் யூனிட்) பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 31, 2024

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு போலீசார் வேலை

image

குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

News March 30, 2024

வேலூர் : ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த  சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

வேலூர்: 5 வேட்பாளர்கள் வாபஸ்!

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

வேலூர்: மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம்

image

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரான நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் களம் காணுகிறார். மன்சூர் அலிகான் உட்பட வேலூரில் 31 பேர் போட்டியிடுகின்றனர். சின்னம் ஒதுக்குவதில் தாமதமான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News March 30, 2024

வேலூர் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

image

வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோயிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 30, 2024

அணைக்கட்டு தொகுதியில் வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

மக்களவை தேர்தலில், வேலூர் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று(மார்ச் 30) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

News March 30, 2024

வேலூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து

image

பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் நேற்று கூத்தம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

காங்கீஸ்வரர் திருக்கோவில் மாவடி சேவை திருவிழா

image

வேலூர் காட்பாடி, காங்கேயநல்லூரில் சமேத காங்கீஸ்வரர் திருக்கோவிலில் மாவடி சேவை திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.பின்னர் இரவு சிறப்பு மேள வாத்தியத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!