India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1307 வாக்குச்சாவடி மையங்களில் 2268 காவல்துறை, பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பதற்றமான 179 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பிற்குத் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட உள்ளதாக எஸ்பி மணிவண்ணன் நேற்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 16) சின்னபள்ளிகுப்பம், அரிமலை கூட்ரோடு, குருவராஜபாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.சி.குப்பம் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டு யுவராஜ், உதயகுமார், வெங்கடேசன் கார்திக் ஆகியோர் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 235 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 500 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 16 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முன்னிட்டு வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான 33 வகையான பொருட்களை இன்று (ஏப்ரல் 16) வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
ஆரணியை சேர்ந்த கார்த்திகேயன்(54), நேற்றிரவு பைக்கில் தனது உறவினரான சசிகலா (37) என்பவருடன் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினார். அப்போது கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் ஓட்டி வந்த பைக் மீது உரசியதில், பைக் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலா சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (ஏப்ரல் 15) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.
நேற்றிரவு 7 மணியளவில் வேலூர் மாநகரில் பாகாயம் பகுதியில், வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான் எம்ஜிஆரின் ரசிகன். இந்தத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவமனை நடத்தி நிறைய மக்கள் சேவையை தொடர்ந்து செய்துவரும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் நேற்று (ஏப்ரல் 15) ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1000 டி-ஷர்ட்டுகள் பறிமுதல் செய்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பணிபுரிய உள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ் குமார், தேர்தல் செலவின பார்வையாளர் அமித் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 15) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் 9 பறக்கும் படை குழுக்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 15) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.