Vellore

News March 26, 2024

தயார் நிலையில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 26) தேர்தல் திருவிழாவிற்கு வாக்காளர்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி அழைப்பது போன்று பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது.

News March 26, 2024

மாற்றுத்திறனாளிகள் முகாம் தற்காலிக நிறுத்தம்

image

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வழக்கம்போல் நடைபெறும் என்று வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று (மார்ச் 25) தெரிவித்துள்ளார்.

News March 26, 2024

வேலூர்: வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அமைச்சர்

image

வேலூர் மாவட்டம், காட்பாடி டவுன் பகுதியில் நடைபெற்ற அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் காந்தி, இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில்தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டம் கொண்டு வந்தவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை செயல்படுத்திவரும் நம்முடைய முதலமைச்சர் என்றார்.

News March 25, 2024

வேலூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் இன்று (மார்ச் 25) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

வேலூர் 45 லட்சம் பறிமுதல் கலெக்டர் தகவல்

image

மக்களவை தேர்தல் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நேற்று (மார்ச் 24) வரை வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 45,28. 260 ரொக்கப்பணமும், 281 மதுபாட்டில்களும், 634  பட்டு சேலைகளும், சுடிதார் ஆடைகளும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News March 25, 2024

தேர்தல்: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, வேலூர் எம்பி தொகுதியில் திமுகவின் கதிர் ஆனந்த், பாஜகவின் ஏ.சி.சண்முகம், அதிமுகவின் பசுபதி உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

வேலூர்: வீட்டுக்கு வீடு பிரியாணி

image

வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர் பிரியாணி செய்யும் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்டனர். மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

News March 24, 2024

வேலூர்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, வேலூரில் தி.மகேஷ் ஆனந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (மார்ச் 23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி சசிகலா  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!