Vellore

News May 13, 2024

வேலூர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று (மே 13) நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் செலுத்தி கொண்டனர்.

News May 13, 2024

வேலூர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று (மே 13) நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் செலுத்தி கொண்டனர்.

News May 13, 2024

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதில் வேலூர் மாவட்டத்தில் 3,291 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. 313 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத 3,604 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிற ஜூலை மாதம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News May 13, 2024

நாளை போக்குவரத்து மாற்றம்: வேலூர் எஸ்பி உத்தரவு

image

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நாளை (மே 14)  நடைபெற உள்ளது. இதையொட்டி  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் குடியாத்தம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களின் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை குடியாத்தம் நகர பகுதிக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News May 12, 2024

வேலூரில் கடும் வெயில்: பொதுமக்கள் அவதி

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே 12 )  104.4°F வெயில் பதிவானது. மேலும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வெளியில் செல்லும் போது குடை, தண்ணீர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர். நேற்று 99.7°F வெயில் பதிவான நிலையில் மீண்டும் 100°F மேல் வெளியில் கொளுத்தி வருகிறது.

News May 12, 2024

முன்னாள் முதல்வர் பிறந்தநாள் அன்னதானம்

image

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற எதிர் கட்சி தலைமையிலான எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (மே 12) வேலூர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையில் காட்பாடி பார்வையற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 12, 2024

மீன்பிடி தடை காலம் மீன்களின் வரத்து குறைவு

image

தமிழிகத்தில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் வேலூர்  மீன் மார்க்கெட்டிற்கு இன்று (மே 12) மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த வாரத்தை விட மீன்களின் விலையும் உயர்ந்தது. பெரிய வஞ்சரம் மீன் ரூ 1600, சிறிய வஞ்சரம் மீன் ரூ 800, இறால் ரூ 450 முதல் 600, கட்லா ரூ 160, நண்டு ரூ 400 முதல் 450, மத்தி ரூ 140 முதல் 160 என மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.

News May 12, 2024

வீட்டில் திருடிய 3 வாலிபர்கள் கைது – 37 பவுன் நகைகள் மீட்பு

image

காட்பாடி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சேனூர் பகுதி சேர்ந்த சங்கர், அவினேஷ் மற்றும் 18 வயதுடைய வாலிபர் ஒருவர் என 3 பேரை போலீசார் நேற்று ( மே 11 )கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 வீடுகளில் 37 பவுன் நகை திருடியதையும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

News May 11, 2024

1000 போலீசார் பாதுகாப்பு

image

குடியாத்தம் கங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாக்க 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.

News May 11, 2024

வேலூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

image

பெங்களூருவில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி 50 பயணிகளுடன் இன்று (மே 11) சென்று கொண்டிருந்தது. அப்போது வேலூர் மாவட்டம் பொய்கை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!