Vellore

News August 5, 2025

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விப்ரோ நிறுவனம் சார்பில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 9 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பி.ஆர்.பி கட்டிடத்தின் 7வது மாடியில் காலை 9 மணிக்கு முகாம் நடைபெறும். 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிரவும்*

News August 5, 2025

வேலூர் BC&MBC மக்களின் கவனத்திற்கு

image

வேலூர் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற வேலூர் மாவட்ட BC&MBC நல அலுவலரை (044-27661888, 0416-2253012) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்

News August 5, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

வேலூரில், புதிய ரேஷன் அட்டை (ஸ்மார்ட் கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. இந்த <>லிங்கில் <<>>சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17309375>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

வேலூர் ரேஷன் அட்டைதாரர்களே…

image

விண்ணப்பித்த ரேஷன் கார்டு (ஸ்மார்ட்கார்டு) கிடைக்கவில்லை என்றாலோ அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் அந்த <>இணையதளத்திலேயே<<>> புகார் அளிக்கலாம். உங்கள் பெயர், மொபைல் எண், இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில ‘மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை’ என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். வீட்டில் இருந்தபடியே செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

வேலூரில் ரயில்வே வேலை… சூப்பர் வாய்ப்பு

image

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <>இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

வேலூர் மாவட்டத்திற்கு இனிமே நிம்மதி!

image

பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்த 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி. மயில்வாகனன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிமேல் வேலூர் மாவட்டம் போதை பழக்கம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்.

News August 5, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.05) வேலூர் மாநகராட்சி மண்டலம் -4ல் டோல்கேட் நாதன் மஹால், கணியம்பாடி ஊராட்சி காட்டுப்புத்தூர் அண்ணாமலையார் மண்டபம், காட்பாடி ஊராட்சி சின்ன வள்ளி மலை ஜம்பு மகரிசி மண்டபம், பேர்ணாம்பட்டு ஊராட்சி கமலாபுரம் ஜி.எஸ்.எம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.

News August 5, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News August 5, 2025

வேலூர் கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

image

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் வேலூர் ஊரீசு கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்க் கனவு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழர்களின் மரபையும் தமிழின் பெருமிதத்தையும் அறிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று ( ஆகஸ்ட் 4 ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 4, 2025

வேலூர்: 10th போதும் எல்லை பாதுகாப்பு படையில் வேலை!!

image

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஆண், பெண் இருபாலருக்குமான 3,588 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெய்லர், கார்பெண்டர், பிளம்பர், பெயிண்டர், எலெக்ட்ரீஷியன், சமையலர், துப்புரவு பணியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயது நிறைந்தவராகவும், 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ முடித்தவருமாக இருந்தால் ஆக.28க்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!