India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்த ரஜினியின் மகன் லிங்கேஸ்வரன்(17). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த லிங்கேஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஒடுகத்தூர் அருகே, மதுபோதையில் தாயை சரமாரியாக தாக்கிய அருண்குமாரை போலீஸார் கைது செய்தனர். வேலைக்குச் செல்லாமல் மது குடித்து, தன் வயோதிப தாயிடம் பணம் பறித்து வந்த அவர், வீட்டு வாசலில் மோசமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், தாயைத் தூக்கில் தொங்கவிட முயன்றதும் தெரியவந்தது. சமூக நலத்துறை மூதாட்டியை மீட்டு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சிற்பக்கலையின் அற்புதமாக திகழ்கிறது. இக்கோவில், 7 படிநிலைகளைக் கொண்ட பிரம்மாண்ட ராஜ கோபுரத்துடன் பக்தர்களை ஈர்க்கிறது. கோவியிலில் போர்க்காட்சிகள், வேட்டைக் காட்சிகள், போன்ற பல கதைகளை உயிர்ப்பிக்கும் விதமாக உள்ளது. ஆமை வடிவ மண்டபம், அழகிய தூண்கள், நந்தி சிலை, 1981 முதல் அணையாமல் எரியும் நவசக்தி சத்யஜோதி விளக்கு, கோவிலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 2-ம் கட்ட புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று (மார்ச் 23) நடந்தது. இந்த பயிற்சி முகாமை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சத்திய நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி ஆகிய 3 வட்டாரங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் அம்சம்மாள் (70). இவர் அதே கிராமத்தில் உள்ள குட்டையில் நேற்று மாலை அவரது கால்களை கழுவுவதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (மார்ச் 23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. பாதுகாப்பை உறுதி செய்ய பகுதிகளாக ரோந்து பணி நடைபெற்று வருகிறது. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மூஞ்சூர்பட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி. லாரி டிரைவரான இவரது மகன் சஞ்சய் (17) பிளஸ் 1 படித்து வருகிறார். மூர்த்தியின் குடும்பத்தினருக்கும், அவரது சகோதரரான மணிகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சய்யின் வயிற்றில் குத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேலூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.