Vellore

News August 6, 2025

வேலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் (scrab) நாளை ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் பங்கேற்க ரூ.100 கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 06) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது ஆபத்து காலங்களில் மேலுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். *இது போன்ற முகாமில் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். ரேசன் அட்டை தாரர்களுக்கு பகிரவும்*

News August 6, 2025

வேலூரில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (0416-2253502) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

வேலூர்: டிகிரி முடித்திருந்தால் போதும்! கை நிறைய சம்பளம்

image

மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் உதவியாளருக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 37 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 – 30 க்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.22,405 – 62,265 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் ஆகஸ்ட் 17க்குள் இந்த <>இணையத்தில் <<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

வேலூரில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் 11.08.2025 மற்றும் 18.08.2025 ஆகிய நாட்களில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். *தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*

News August 6, 2025

வேலூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழா

image

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித்துறை இணைந்து நடத்தும் 11வது தேசிய கைத்தறி தின விழா ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியாத்தம் பத்மசாலிய திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் கைத்தறித் தொழிலாளர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விரைவாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 6, 2025

வேலூர் கலெக்டர் தலைமையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

image

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் டிபோர் வளாகத்தில் நாளை காலை 9:30 மணியளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 6, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால் இன்று(ஆக.5) இரவு ரோந்து பணியில் ஈடுபட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காவல் அதிகாரிகளுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடுப்பு முயற்சிக்கு ஆதரவு தேவை

image

வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டார். பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்கவும், பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை முன்னெடுக்கவும் மக்கள் ஆதரவு தேவை என்றும், தடுப்புப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

error: Content is protected !!