Vellore

News April 8, 2025

வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது

image

வேலூர் ஊரீசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றும் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மார்ச் 18-ம் தேதி 7 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ஆந்திராவில் பதுங்கி இருந்த கல்லூரி துணை முதல்வர் அன்பழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

News April 8, 2025

வேலூரில் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஏப்ரல் 12-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

image

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <>ambedkarfoundation.nic.in<<>> என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News April 8, 2025

அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு

image

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில், வேலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 21 வரை ஆகும். கல்வித்தகுதி 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 8, 2025

தொடர்ந்து சதமடித்து வரும் வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தினமும் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி வருகிறது. நேற்றும் (ஏப்ரல் 7) வெயில் 101.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக குடைகளை கொண்டு செல்லுங்கள். இன்று (ஏப்ரல் 8) முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 8, 2025

பள்ளிகொண்டாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்

image

பள்ளிகொண்டாவில் 70ஆவது ஆண்டு மாடு விடும் விழா நேற்று (ஏப்ரல் 7) நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 250 மாடுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசலில் இருந்து மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.

News April 8, 2025

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப்பொறியாளர் கைது

image

குடியாத்தத்தில், செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்த பணிக்கு நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (ஏப்ரல் 7) கைது செய்தனர். நிலுவைத்தொகையை வழங்க தனக்கு ரூ.30,000 தர வேண்டும் என அவர் கூறியுள்ளதாக லிங்கேஸ்வரன் என்பவர் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரையடுத்து, உதவிப்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

News April 8, 2025

வேலூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் பகுதிகளாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். *இரவில் வெளியே மற்றும் வேலைக்கு செல்வோருக்கு தேவைப்படும். கண்டிப்பாக பகிரவும்*

News April 8, 2025

வேலூர் குற்றவாளியை குண்டாசில் தள்ளிய கலெக்டர்

image

பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சுப்பிரமணி (43) என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மதிவாணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஏப்ரல் 7) உத்தரவிட்டார். இதற்கான ஆணையை வேலூர் மத்திய சிறையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சமர்ப்பித்தார்.

News April 7, 2025

வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 7) மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 671 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் வேலூர் டி ஆர் ஓ மாலதி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!