India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்கள்
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
காட்பாடி – லத்தேரி இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், இன்று (ஏப்ரல் 10) அதிகாலை ஆண் – பெண் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த இருவர் மீதும், சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் ரயில் ஏறி இறங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார், உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? என விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வட மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று (ஏப்ரல் 9) வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயிலாக 101.3°F டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், பகல் நேரத்தில் பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததோடு, வீடுகளிலேயே முடங்கினர்.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 10) முதல் வரும் 14ஆம் தேதி வரை வடமாவட்டங்களில் 40°C முதல் 42°C வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் இரவு நேர ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலைக்கு செல்வோர் இரவு நேரத்தில் சந்திக்கும் பிரச்சினை தொடர்பாக கொடுக்கப்பட்ட எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். *கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்*
வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சார்பில், வரும் 11ஆம் தேதி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
வேலூர் அரசு உதவி பெறும் (ஊரிஸ்) தனியார் கல்லூரியில், பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில், தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.