India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூர்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் கொணவட்டம் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி இன்று அகற்றப்பட்டன. வேலூர் டவுன் போலீஸ், தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், பல தற்காலிக கட்டிடங்கள் மற்றும் வணிகக் கூடங்கள் இடிக்கப்பட்டன. பொதுமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், “DRUG FREE TN” என்ற தலைப்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நாளை (09.08.2025) காலை 5.30 மணிக்கு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தொடங்குகிறது. மூன்று பிரிவுகளில் 20 பரிசுகள் வழங்கப்படவுள்ள இந்தப் போட்டியில் ரூ.60,000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்றைய (ஆக.8) இரவு ரோந்து பணிக்கான காவலர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் பணியில் ஈடுபடுவார்கள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரத்தில் தங்களுக்கு தேவைப்பட்டால் காவலர்களை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 8) “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்” என்ற நிகழ்வின் வாயிலாக சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விப்ரோ நிறுவனம் சார்பில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு நாளை (ஆக.9) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பி.ஆர்.பி கட்டிடத்தின் 7வது மாடியில் காலை 9 மணிக்கு முகாம் நடைபெறும். 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு பகிரவும்
வேலூர் மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 30 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.12-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <
சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <
வேலூரில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வேலூரில் இன்று (ஆகஸ்ட் 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவருக்கும் உடனே ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் நாளை அணைக்கட்டு வட்டாரத்திற்கு நேமந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கணியம்பாடி வட்டாடத்திற்கு வல்லம் குமரன் மஹால், கே.வி.குப்பம் வட்டாரத்திற்கு கீழ் ஆலத்தூர் ஜி.வி.எஸ் மஹால் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம்
Sorry, no posts matched your criteria.