India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற முன்னணி விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர், தூயதமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் 122 வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் குடியாத்தம் நேரு பூங்காவில் நாளை (ஏப்ரல் 12 ) காலை 9 மணி அளவில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருதினை பெறுவதற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் சிறந்த செயல்பாடுகளுக்கான சான்றுகள், அறிக்கைகள், புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் கொண்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் மகளிர் திட்ட அலுவலகத்தில் சமர்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 8667388982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பங்குனி மாத பௌர்ணமியையொட்டி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து நாளை (ஏப்ரல் 12) முதல் வேலூரில் இருந்து 50 சிறப்பு பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30, ஆற்காட்டில் இருந்து 20 பஸ்கள் என மொத்தம் 100 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். *திருவண்ணாமலை செல்வோருக்கு பகிரவும்*
மாவட்ட ஆட்சியர் – 0416-2252345, மாவட்ட வருவாய் அலுவலர் – 0416-2253502, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 0416-2232999, சார் ஆட்சியர் – 9445000417, திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை – 7373704205, மாநகராட்சி ஆணையர் – 7397389320, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9445008159, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) – 7402606606, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) – 7824058059, மக்கள் தொடர்பு அலுவலர் – 9498042453
பட்டியூர் பகுதியில் காதல் ஜோடி நேற்று (ஏப்ரல் 10) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், லத்தேரியைச் சேர்ந்த மணிகண்டனுக்கு (27) ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கோகிலா (24) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து கொண்டார். பெண் வீட்டார் பிரித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. மறக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
பொது நூலகத்துறை மூலம் குடியாத்தம், கே வி குப்பம், காட்பாடி ஆகிய வட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட கிளை நூலகங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று (ஏப்ரல்11) முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி குடியாத்தம் புதுப்பேட்டை கிளை நூலக கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக குருசாமி தபேலா பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள பசுமை தமிழ்நாடு திட்ட அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட வன அலுவலராக ஊட்டி டேன்-டீ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.