India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில், முதுநிலை பட்டப்படிப்புகளில் உள்ள 240 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது. இதில் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பொது கலந்தாய்வு நடைபெறும். www.tngasa.in என்ற இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ரங்காபுரம் மலைமேல் அஷ்டபுஜ காலகண்ட பைரவர் கோவில் உள்ளது. மே மாதம் பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம் முடிந்த பிறகு அவரின் தலை மீது பூ வைக்கப்படும். அதில் 1 எலுமிச்சை பழம் வைப்பார்கள். அதில் ஒரு ஈ பறந்து வந்து சில வினாடிகள் அமர்ந்து விட்டு பறந்து சென்றுவிடும். பின், பழம் தானாக சுற்றி கீழே விழும். அதை ஒருவர் பிடித்து கொள்வார். பிறகு அருள்வாக்கு சொல்லப்படும். ஷேர் செய்யுங்கள்
இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
வேலூர் மாவட்டத்தில் ஆக.9 இரவு 10 மணி முதல் இன்று(ஆக.10) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மாவட்ட காவல் துறை. மேலே குறிப்பிட்டுள்ள எண்களில் தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் நேரும்போது அருகே உள்ள காவலரது எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரியபடுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம், வட ஆற்காடு ஓவியர் சங்கம் மற்றும் டாட் இமேஜிங் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இதில் 1 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 7667580831, 9443885207 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று ஓடினார். இந்த மரத்தான், போதைப்பொருள் தடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த நீர்வரத்தால் ஆற்றுப்பாலம் மற்றும் குறுக்கு வழிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுப்புற பாசன கால்வாய்கள் நிரம்பி வழிந்ததால், விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. பாதுகாப்பு காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
வேலூரில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350673>>தொடர்ச்சி<<>>
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.