Vellore

News April 16, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 16, 2025

வேலூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் ஏப்ரல் 25-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

வேலூர் சிறையும் சுதந்திர போராட்டமும்

image

ஆங்கிலேயர் காலத்தில் அந்தமான் சிறைக்கு அடுத்தபடியாக கொடிய சிறையாக வேலூர் சிறை இருந்தது. 1830ல் தொடங்கப்பட்ட இங்கு விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, இராஜாஜி, கர்மவீரர் காமராஜர் போன்ற தலைவர்களும், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவும் சிறை வாசத்தை அனுபவித்தனர். விடுதலை போராட்டதிலிருந்து இன்று வரை செயல்பட்டு வரும் இந்த சிறை தற்போது புழல் சிறைக்கு அடுத்ததாக பார்க்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

வேலூர்: பிளஸ்-1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி 

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வேலூர் சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்பள்ளியில் தொடங்கியது. இதில் முதன்மை தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வாளர்கள் ஆகியோர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். குழந்தைகள், பெரியவர்களிடம் செல்போனை கொடுக்கும் போது கனவமாக இருங்க. ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் இறகு பந்து பயிற்சி பெற விரும்புவோர் பங்கேற்கலாம். இதற்கான உடல் தகுதி தேர்வு 28-ஆம் தேதி காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. உடல்தகுதித் தோ்வில் பங்கேற்போா் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், பள்ளி, கல்லூரியிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ், புகைப்படம் ஆகியவை கட்டாயம் கொண்டுவர வேண்டும். SHARE 

News April 16, 2025

வேலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வேலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்துச் செல்லும் கனிமங்களுக்கு மொத்த இசைவாணைச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எதிா்வரும் 21ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மாவட்டத்தில் உள்ள குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகையான கனிமங்களுக்கு விண்ணப்பம் செய்து, நடைச்சீட்டு எனும் இ-பா்மிட் பெற்றுக் கொள்ள குவாரி குத்தகைதாரா்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்

News April 16, 2025

10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று  இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 15, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஏப்ரல் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News April 15, 2025

வேலூரில் இலங்கை மன்னனுக்கு நினைவிடம்

image

இந்திய சுதந்திர போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய வேலூர் இலங்கையோடும் தொடர்பு கொண்டுள்ளது. இலங்கையின் கண்டி பகுதியை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்ரமராச சிங்கன் வேலூர் கோட்டையில் பிரிட்டிஷால் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார். மன்னர் விக்ரமராச சிங்கன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இங்கு நினைவிடம் உள்ளது. இலங்கை சுதந்திர போரிலும் தொடர்பு கொண்ட வேலூர் பற்றிய தங்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!