India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை சார்பில் 1100 மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கும் விழா வரும் நவ.29ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை வழங்குகிறார். என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் துணை ஆய்வாளர் பதவியில் பணியாற்றிய 9 பேர் ஆய்வாளர் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காவல்துறை தரப்பில் புதிய காவல் நிலைய பணி நியமன ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை, வேலூர் & ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 ஆய்வாளர்களுக்கு பணியிடம் மாற்றும் உத்தரவை சரக டிஐஜி தர்மராஜன் தாகூர் இன்று (நவ.27) வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் டிசம்பர் 2025 முதல் மாதத்தின் புதன்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. இது அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடைபெற உள்ளது. மேலும், வெள்ளிக் கிழமைகளில் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று (நவ.27) மனு அளித்துள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர், எத்திராஜ் மண்டபத்தில் புத்தகக் காட்சி நாளை நவ.28 முதல் தொடங்குகிறது. அனைத்து வயது மக்களும் பயன்படும் வகையில் பல்வேறு வகை நூல்கள், கல்வி, இலக்கியம், அறிவியல், குழந்தைகள் புத்தகங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இவை, பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நுழைந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல நாள்கள் நடைபெறும் இக்காட்சிக்கு வாசகர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறவும்.

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

வேலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<

வேலூர், காட்பாடியை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஜான்சி மேரி தனது 2 மகள்களின் உயர்கல்விக்காக கட்டணம் செலுத்த பலரிடம் கடன் வாங்கினார். இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, மேரியால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால், மனஉளைச்சலில் இருந்த மேரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்த போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, டிகேஎம் மகளிர் கல்லூரி ஆகிய 3 மையங்களில் 803 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு கண்காணிப்பு பணியில் துணை ஆட்சியர் தலைமையில் 1 மொபைல் டீம், ஒவ்வொரு தேர்வுக்கூடத்துக்கு 5 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.