India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூரில் இயங்கி வரும் செல்வம் ஸ்கொயரில் உள்ள PVR-INOX சினிமாவில் Operations Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு 40 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் நவம்பர். 30ம் தேதிக்குள் இந்த <

குடியாத்தம் மூங்கப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் கிராம மக்களுக்கு கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் சுடுகாடு உள்ளது. மழையால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆற்று தண்ணீரில் மூழ்கியது. அந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் இறந்த நிலையில், நேற்று (நவ.13) மாலை அவருடைய உடலை அடக்கம் செய்ய ஆற்றோரத்தில் சேறும் சகதியும் நிறைந்த பாதையில் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் அடுத்த பொய்கை சேர்ந்தவர் ஜீவித்(18).இவர் தனியார் கல்லூரியில் பி ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் (நவ.13)அன்று அவரது வயலில் இருந்த பசு மாடுகளை அழித்து வர சென்ற போது திடீரென மின்னல் தாக்கி கீழே சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நாளை( நவ.15) பராமரிப்பு காரணமாக மின் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி குடியாத்தம், பேரணாம்பட்டு, வள்ளிமலை, வடகாத்திப்பட்டி, ஒடுகத்தூர், வரதலம்பட்டு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

வேலூர்: கீழ்மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிராமன் (61) டெய்லர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த காட்பாடி போலீசார் சென்று பார்த்தனர். அப்போது ஜோதிராமன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.13) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே தகுதி வாய்ந்த யோகா பயிற்சியாளர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவம்பர் 19-ம் தேதி மாலை 4 மணியளவில் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.