India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள் இங்கே <

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இன்று (நவ.28) சென்னையில் துவங்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியினை காண்பதற்காக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 ஹாக்கி வீரர்கள் மற்றும் 55 வீராங்கனைகள் ஆகியோர் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், வீரர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெறும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிகளை பார்வையிட வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 28) வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.28) பீஞ்சமந்தை, ஜார்தான் கொள்ளை, பாலம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 48 கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. 400 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு குறித்து அவர் ஊக்கமளித்தார்.

கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடும் விதமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நவ.29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வேலூர் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது . இதில் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<

வேலூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

காவல் உதவி ஆய்வாளர்களாக 10 வருடத்துக்கு மேலாக பணியாற்றிய 9 பேர், பதவி உயர்வுடன் வேலூர் சரகத்தின் பல காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டனர். டிஜிபி வெங்கட்ராமனின் உத்தரவு அடிப்படையில், டிஐஜி தர்மராஜன் நியமனத்தை அறிவித்தார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த அதிகாரிகள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி கன்ட்ரோல்மென்ட் மற்றும் திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் (டிசம்பர் 2,3,9,10,11) தேதிகளில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர சிறப்பு இரயில் (06080) கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் ஆன்மீக பக்தர்கள் வசதிக்காக இந்த இரயில் இயக்கப்படுவதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.