Vellore

News November 10, 2025

வேலூர்: இன்றே கடைசி- APPLY HERE!

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

வேலூரில் நாளை மின் தடை

image

வேலூரில் நாளை (நவ.11) காலை 9 மணி முதல் 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், தோட்டப்பாளையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, அப்துல்லாபுரம், கிருஷ்ணா நகர், பிஷப் டேவிட் நகர், கஸ்பா, கொணவட்டம், கொசப்பேட்டை, ஓல்ட் டவுன், சார்பனா மேடு, இறைவன்காடு: வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் மின் தடை ஏற்படும்

News November 10, 2025

வேலூரில் 1,056 பேர் ஆப்சென்ட்!

image

வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 9,561 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வி.ஐ.டி. பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி ஆகிய 3 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் 8,505 பேர் எழுதினர் எனவும், 1,056 பேர் எழுத வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி ( நவம்பர்-09) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 9, 2025

வேலூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க.

News November 9, 2025

வேலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

News November 9, 2025

வேலூரில் 3.5 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

image

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளிலும் நேற்று (நவ.8) வரை 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்பட்டுள்ளது. என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 9, 2025

வேலூரில் அடையாளம் தெரியாத முதியவர் பலி

image

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 60வயது முதியவர் மயங்கி கிடப்பதாக நேற்று புகார் வந்துள்ளது. அதன் பேரில் சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று முதியோரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (நவ.09) பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து. இறந்த முதல்வர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றன.

News November 9, 2025

வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

வேலூர், கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் வரும் நவம்பர் 11-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதில் அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே கே.வி. குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் தங்கள் குறைகளை கோரிக்கைகளை மனுவாக அளித்து தெரிவிக்கலாம் என தாசில்தார் பலராமன் தெரிவித்துள்ளார்.

News November 9, 2025

வேலூர்: உடல் எரிந்து மூதாட்டி பலி!

image

வேலூர், கட்டுப்படியை சேர்ந்தவர் காந்தாமாள்(85). இவர் கடந்த 31ம் தேதி வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீ பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.08) பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!