Tuticorin

News April 24, 2025

கோவில்பட்டியில் 200 பண்ணை குட்டைகள் திட்டம்

image

கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 24, 2025

திருச்செந்தூர் சித்திரை வசந்த திருவிழா அறிவிப்பு

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மே.3 அன்று தொடங்கி மே.12 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

News April 24, 2025

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருள்செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

News April 23, 2025

தூத்துக்குடி:ஆத்தூர் வெற்றிலையின் ருசியின் ரகசியம்

image

ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*

News April 23, 2025

தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

image

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

மத்திய அரசுக்கு தூத்துக்குடி எம்பி கடிதம்

image

காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையை தீர்மானிக்க வேண்டும் என தூத்துக்குடியி எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News April 23, 2025

திருச்செந்தூர் கோவில் குறித்து நீதிமன்றம் உத்தரவு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி கட்டுமான பணிகள் நடத்த வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கடலோர ஒழுங்காற்று குழும அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

News April 23, 2025

தூத்துக்குடி அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 -24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 23, 2025

மினி பஸ்களை இயக்க இன்றே கடைசி நாள் 

image

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் புதிதாக 13 புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் இன்று மாலைக்குள் புதிய வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க ஆன்லைன் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தனது செய்தில் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

அரசு பேருந்து ஓட்டுனருக்கு 6 மாதம் சிறை

image

தூத்துக்குடி கோவில் பிள்ளை நகரை சேர்ந்தவர் மோகன். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் மீது அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரான முடிவைத்தானேந்தலை சேர்ந்த முருகனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

error: Content is protected !!