Tuticorin

News April 26, 2025

துர்நாற்றம் வீசும் கடல் பாசிகள்

image

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்கா அருகே உள்ள கடல் பகுதியில் கடந்த ஒருவார காலமாக கடலின் ஆழப் பகுதியில் வாழும் கடல் பாசிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கடற்பாசிகள் கரை ஓரத்தில் குவியல் குவியலாக கிடக்கின்றன. இதனை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

News April 26, 2025

திருச்செந்தூர் கோயிலில் முதியோர்களுக்கு இருக்கை வசதி

image

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய பொது வரிசை, நூறு ரூபாய் கட்டண வரிசை மற்றும் முதியோர்களுக்கான வரிசை என்று மூன்று வரிசைகள் உள்ளன. இவைகளில் விழா காலங்களில் முதியோர்கள் வரிசையில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் முதியோர்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து முதியோர்கள் வரிசையில் கோவில் நிர்வாகம் தற்போது இருக்கைகளை அமைத்துள்ளது.

News April 25, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் என 6 – 8 வயது வரை உள்ள குழந்தைகள், 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதுபோன்று, இல்லத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை *SHARE* பண்ணுங்க

News April 25, 2025

நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 18 பேர் படுகாயம்

image

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, இன்று தனது குடும்பத்தினருடன், வேனில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, மதுரை திரும்பி கொண்டு இருந்தார். மதுரை பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற வேன் திடீரென்று நிலைத்தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் 4 குழந்தைகள் 8 பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2025

தூத்துக்குடி: விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி

image

புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தத்துரூப ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.

News April 25, 2025

தூத்துக்குடி: உதவி லோகோ பைலட் பணி – மதுரை கோட்டம் அறிவிப்பு

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *தூத்துக்குடி மக்களே மறக்காமல் அப்பளை பண்ணுங்க*

News April 25, 2025

திருச்செந்தூர் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

image

திருச்செந்தூர், நடுநாலுமூலை கிணறு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம் (25). கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி சுரேஷ், அருள்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

News April 24, 2025

குவாரி குத்தகை உரிமைத்துக்கு விண்ணப்பிக்கலாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில், கல்குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த முறையை எளிமையாக்கும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் உரிமம் பெறுவோர் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

News April 24, 2025

சுவையான தூத்துக்குடி மீன் பிரியாணி

image

தூத்துக்குடி மீன் பிரியாணிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த பிரியாணியில், திருக்கை, கணவாய், பாறை அல்லது பிற கடல் மீன்களை பயன்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி பகுதியின் தனித்துவமான மசாலா கலவைகளாலும், கடல் மீனின் சுவையாலும், மீன் பிரியாணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிரியாணியை சுவைக்க முடியும். நீங்கள் சுவைத்துள்ளீர்களா? சுவைக்காத உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.

News April 24, 2025

முத்தமிழறிஞர் கலைஞர் மாவட்ட அளவிலான செம்மொழி நாள் விழா

image

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. பள்ளிக்கு – 09.05.2025 மற்றும் கல்லூரிக்கு – 10.5.2025 நடைபெற உள்ளது. முதல் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7000 ரூபாய் , மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442881369 இந்த எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!