India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் உள்ளது தூய பவுலின் ஆலயம். கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த ஆலயத்தின் மிக நேர்த்தியாக கட்டப்பட்ட 192 அடி உயர கோபுரம் 1868 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மிகவும் புகழ்மிக்க இந்த ஆலயத்தின் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வியாழன் அன்று மாபெரும் அசன விருந்து பண்டிகை நடைபெறும். இதில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரம் பகுதியில் தேவேந்திரன் (17) என்ற மாணவன் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சேரகுளம் போலீசார் வழக்குப் பதிந்து 17 வயது மதிக்கத்தக்க 3 இளஞ்சீறார்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே உள்ள பொட்டலூரணியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடிவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (10.03.2025) 300 ஆவது நாளை முன்னிட்டு கூட்டம் நடைபெற உள்ளது என போராட்டக்குழு அறிவித்துள்ளது. இதில் பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் அடுத்த வாரம் மார்ச்.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மார்ச் 8, 9 தேதிகளில் ஈரநிலப் பறவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இயற்கை ஆர்வலர்கள், பறவை கண்காணிப்பாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் அனைவருக்கும் பிடித்தமான உணவில் கண்டிப்பாக பொறித்த பரோட்டா வரும். இங்கு வீதிக்கு வீதி பொறித்த பரோட்டா கடை உண்டு. இந்த பரோட்டாவிற்கென தயாரிக்கும் சால்னா அனைவரின் நாவையும் கட்டுப்படுத்தி வைக்கும். 3 வகையான சால்னா, வெங்காயம் தான் பொறித்த பரோட்டாவிற்கு செம்ம காம்பினேசன். சில கடைகளில் கொடுக்கப்படும் பீப் சால்னா அல்டிமேட் தான். *பொறித்த பரோட்டா சாப்பிடாத நண்பருக்கு பகிரவும்*
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மொத்தம் 13 அமர்வுகளுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று (மார்ச்-08) நடைபெற்றது. மாவட்ட நீதிபதி வசந்தி தலைமையில் நடைபெற்ற இதில் மொத்தம் 3252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக மொத்தம் ரூபாய் 6 கோடியே 62 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவு கொட்டுவதாக தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற சிறிய ரக கப்பலில் ரூ.80 கோடி மதிப்புள்ள 30 கிலோ ஹசீஸ் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் மற்றும் குற்ற புலனாய்வுத்துறையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து , 11 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் துறைமுகப் பணியாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அணுக்கழிவுகள் கொட்டப்படுவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த ஒரு அணு உலையும் இல்லை; எங்கும் அணுக்கழிவுகளும் கொட்டப்படவில்லை; இவ்வாறு பொது அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*பகிர்ந்து உஷார் படுத்துங்கள்*
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தலில் நன்குடி வேளாளர் சமூகத்தினர் உள்ளனர். இங்கு குழந்தை பிறந்தால் குலவை சத்தமிடுவர். பெண் குழந்தை பிறந்தால் அதிக குரல் எழுப்பி குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அரசு பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இவர்கள் பெண்களுக்கு சம பங்கு சொத்து வழங்கி வருகின்றனர். கோவில் வரி, வீட்டு வரி எல்லாமே பெண்கள் பெயரில்தான்.*புதுசுனா ஷேர் பன்னுங்க*
Sorry, no posts matched your criteria.