Tuticorin

News April 14, 2025

சாத்தான்குளம் அருகே காவலரின் தாய் வீடு புகுந்து கொலை

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக விக்ராந்த் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், இன்று (பிப்.14) காலை அவர் பணிக்கு வந்து விட்டார். இன்று வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் வசந்தா (65) என்பவரை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 14, 2025

அம்பேத்கர் பிறந்தநாள் – தூத்துக்குடி எம்பி சூளுரை

image

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (ஏப்.14) முகநூல் பக்கத்தில்; ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை கீற்றாக, ஜனநாயக உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரலாக, சாதி மத ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக என்றென்றும் சுடர்விட்டு ஒளிரும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று. அவர் உயர்த்தி பிடித்த அடிப்படை கட்டுமானங்களை அழிக்கத் துடிக்கும் பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.

News April 14, 2025

தூத்துக்குடிக்கு எஸ்ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரை தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன்  தாக்கியதாகவும், அதனால் வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

News April 14, 2025

முதல்வர் படைப்பகம் இடம் தேர்வு

image

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வசதியாக முதல்வர் படைப்பகம் 30 இடங்களில் அமைக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் இடத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் ஈடுபட்டனர்.

News April 14, 2025

மாற்றுத் திறனாளிகள் ஏப்ரல் 30க்குள் அனுப்ப வேண்டும்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை மாநில ஆணையத்திற்கு தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக ஏப்ரல் 30க்குள் அனுப்பி வைக்கலாம். முன் கூட்டியே பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வைத்து மே 29,30 ஆகிய தேதிகளில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. மனுக்கள் தாக்கல் செய்வது குறித்த தகவல்களுக்கு 9499933236 என்ற எண்ணில் அழைக்கலாம்.

News April 14, 2025

தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப்.17 அன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 16 நிறுவனங்கள் பங்கேற்கும் நிலையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,000 – ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை இங்கே <>கிளிக் <<>>செய்து தெரிந்து கொள்ளலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 14, 2025

தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.

News April 13, 2025

புத்தாண்டில் இங்கு வழிபாட்டால் பிரச்சனைகள் வராது !

image

தமிழ் புத்தாண்டு அன்று இந்துக்கள் முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் புத்தாண்டு அன்று வழிபாடு செய்ய சிறந்த கோயில் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோயில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் எழுப்பப்பட்ட முதல் விநாயகர் கோயில் என்ற பெருமையை பெற்ற இக்கோயிலில் வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் இருக்காது என்பது ஐதீகம்.

News April 13, 2025

மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் அறிவிப்பு 

image

திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ஷீலா ஸ்டீபன் தெரிவித்துள்ளார். கோடைகால பயிற்சியில் விளையாட்டுக்களான தடகளம், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து போன்ற பயிற்சிகள் வருகிற மே 1 முதல் 16 தேதி வரை நடைபெற உள்ளது. காலை, மாலை என இரு வேளை நடைபெற உள்ளது. தொடர்புக்கு 95787 83632 அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்*

News April 13, 2025

தூத்துக்குடி:திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!