India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த நீல புஷ்பம் (60) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கே குளித்து இளைப்பாறி வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆறுமுகநேரியை சேர்ந்த கண்ணன் நேற்று முன்தினம் காயல்பட்டினம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதனையொட்டி கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நகர திமுக அலுவலகத்தில் வைத்து நகர சபை தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தொகுதியில் தேர்தலையொட்டி 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை வரை 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 25 லட்சத்தி 6500 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி, அஜித்குமார், கார்த்திக் உட்பட 6 இளைஞர்கள் நேற்று அண்ணா நகர் பகுதியில் சாலையில் சென்ற ஒருவரிடம் அருவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரின் பக்கத்து வீட்டு மூதாட்டி ஐயங்கனி (60) என்பவர் சண்டையை தடுக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கனிமொழி எம்பி வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து இன்று இரவு சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதா ஜீவன் முத்தையாபுரம் முள்ளக்காடு பொட்டல்காடு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.