India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் 48,726 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் வெளிவந்து அதன் பின்னர் ஆஜராகாமல் இருந்து வந்த எதிரிகள் 689 பேர் மீது இந்த ஆண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜாமினில் வெளிவந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
செவத்தையா சுதந்திரப் போராட்டத்தில் வீரம் மிக்க பெயர். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமத்துறையின் பெயர் தான் செவத்தையா. மதிநுட்பம் ஆற்றல் மிக்கவரான செவத்தையா ஆங்கிலேயர்களால் தகர்க்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை தனது மதி நுட்பத்தால் கற்களையும் வைக்கோலுக்கு கொண்டு மீண்டும் கட்டினார். 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பீரங்கி குண்டு கொண்டு கோட்டையை தகர்க்க முயன்ற பொழுது அது முடியாமல் போனது.SHARE IT
தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஜாதி மத ரீதியிலான புகைப்படங்கள் மற்றும் பாடல்களை ஒளிப்பரப்புதல், இணையங்களில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; கடந்த 6 மாதங்களில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.*நண்பர்களுக்கு பகிர்ந்து எச்சரியுங்கள்*
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார். *விவசாய நண்பர்களுக்கு பகிரவும்*
திருச்செந்தூர் கோயிலில் நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து இபிஎஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “உடல் நலக்குறைவால்தான் அந்த நபர் உயிரிழந்தார். வேறு காரணம் இல்லை என அவரது குடும்பத்தினர் எழுதி கொடுத்து உடலை பெற்றுக்கொண்டனர். ஆனால் இலவு காத்த கிளி போல இறப்பிலும் இபிஎஸ் அரசியல் செய்கிறார்” என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலக்கரி கையாள்வதில் ஒரே நாளில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 15ஆம் தேதி 6வது பெர்த்தில், எம்வி விக்டோரியா என்ற கப்பலில் 30,352 டன் நிலக்கரியை மொபைல் கிரேட் மூலம் கையாண்டு இந்த சாதனையை படைத்துள்ளதாக துறைமுகத்தின் நேற்றைய(மார்ச் 16) செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.*தேவைபடுவோருக்கு பகிரவும்*
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் சுவாமி தரிசனத்திற்காக கட்டண தரிசன வரிசையில் நிற்கும்போது திடீரென மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஓம்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.