India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொட்டல்காடு அருகே உள்ள டீ கடை முன்பு சட்ட விரோதமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பிரேம்குமார்(19) என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க சென்ற டீக்கடையை சேர்ந்த வேல்ராஜ்(45) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தொகுதியில் இரவு 8 மணி வரை 70 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி 59.66% சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது.
மக்களவை தேர்தலையொட்டி ஒட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை மாவட்ட முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 261 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி ஒட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை மாவட்ட முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட 261 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குட்பட்ட 1624 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஒட்டப்பிடாரம் வட்டம் மேல அரை குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மக்களவை தேர்தலை ஒட்டி ஏராளமான அரசு பேருந்துகள் தேர்தல் போக்குவரத்து பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் இன்று கிராமங்களுக்கு செல்லும் ஏராளமான பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று 1624 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, வாக்குப்பதிவை ஒட்டி 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசைகள் நின்று வாக்களித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. இவர் நேற்று குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் வைத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.