India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொது மக்களிடம் கடந்த சில தினங்களாக பிரைம் இந்தியா டவர் என்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறிய மர்ம நபர்கள் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேவை என கூறி ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட முயன்று வருகின்றனர். எனவே இது போன்ற பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி திருவிழா, பௌர்ணமி பூஜை, தமிழ் வருடப்பிறப்பு பூஜை சிறப்பாக நடக்கும். மூலஸ்தானத்தில் மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ,மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வேண்டினால் திருமணத்தடை நீங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். *ஷேர் பண்ணுங்க*
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள்(ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 தொழில்நுட்ப உதவியளர்(Field Technician) காலிப்பணியிடம் உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ளது சக்கரபாணிபெருமாள் கோயில். கும்பகோணத்தை போன்றே இங்கும் சக்கரபாணி பெருமாளாக அருள்கிறார் எம்பெருமான். இங்குள்ள மூலவர், கல்லில் செதுக்கப்பட்டு ஆழிக்கலவை மற்றும் மூலிகைப் பூச்சுகளால் ஆன திருமேனியராக அருள்கிறார். திருமணத்தடை உள்ளவர்கள்ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு சென்று, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால்,தோஷம் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும்.
தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியிலிருந்து தூத்துக்குடி வரை இணைப்புச் சாலை அமைக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் ஏவ வேலு நேற்று நெடுஞ்சாலைகள் மானிய கோரிக்கையின் போதுதெரிவித்தார். பிற மாவட்டங்களில் மேலும் 2 இணைப்பு சாலை திட்டத்தையும் சேர்த்து மொத்த ரூ.230 கோடியில் இந்தச் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் ஏப்.4 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மீனவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). இவர் நேற்று நாலாட்டின்புதூர் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த பைக் ஒன்று இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி மதன் மற்றும் தென்பாகம் காவல் நிலைய எஸ்ஐ முத்தமிழ் ஆகியோர் வழக்கறிஞர் தொழிலுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத்தினர் 02.04.25 முதல் சனிக்கிழமை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு இன்று வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.