India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X தளப்பக்கத்தில், இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான இந்த லிங்கை<
திருச்செந்தூர், நடுநாலுமூலை கிணறு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம் (25). கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி சுரேஷ், அருள்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், கல்குவாரி குத்தகை உரிமம் பெற விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும் உரிமம் நேரடியாக மற்றும் தபால் மூலமாக விண்ணப்பங்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த முறையை எளிமையாக்கும் வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் உரிமம் பெறுவோர் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தூத்துக்குடி மீன் பிரியாணிக்கு தனி சிறப்பு உள்ளது. இந்த பிரியாணியில், திருக்கை, கணவாய், பாறை அல்லது பிற கடல் மீன்களை பயன்படுத்தப்படுகின்றன. தூத்துக்குடி பகுதியின் தனித்துவமான மசாலா கலவைகளாலும், கடல் மீனின் சுவையாலும், மீன் பிரியாணி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிரியாணியை சுவைக்க முடியும். நீங்கள் சுவைத்துள்ளீர்களா? சுவைக்காத உங்க நண்பர்களுக்கு *SHARE* பண்ணுங்க.
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. பள்ளிக்கு – 09.05.2025 மற்றும் கல்லூரிக்கு – 10.5.2025 நடைபெற உள்ளது. முதல் 150 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7000 ரூபாய் , மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9442881369 இந்த எண்ணை அழைக்கவும்.
கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குனர் மணிகண்டன் நேற்று விடுத்துள்ள செய்தியில், விவசாய நிலங்களில் பண்ணைகள் அமைக்க அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது. அந்த வகையில் கோவில்பட்டி வட்டார பகுதிகளில் 200 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மே.3 அன்று தொடங்கி மே.12 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருள்செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*
செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.