Tuticorin

News May 7, 2025

செல்வம் பெருக இந்த கோயில் மண் எடுத்துச் செல்லுங்க

image

காயாமொழி அருகே குதிரைமொழி-தேரிகுடியிருப்பு கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஆன்மீகப் பயணமாக பக்தர்கள் வருகை தருகிறார்கள். கார்த்திகை மாதம் இக்கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவின்போது கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி, வீடு, கடைகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை எல்லோருக்கும் *SHARE* பண்ணுங்க.

News May 7, 2025

தூத்துக்குடி: குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் – அமைச்சர் தகவல்

image

தூத்துக்குடி, அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் இந்த வாட்ஸ் ஆப் எண் 80980 24555 மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் <>லிங்க் <<>>மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிடம் நேரடியாக தெரிவிக்கலாம். புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க*

News May 7, 2025

தூத்துக்குடி: போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடர்பு எண்

image

தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், டெப்போ மேனேஜர்கள் தொடர்பு எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் – 9487599053
▶️ தூத்துக்குடி புறநகர் – 9487599063
▶️ தூத்துக்குடி நகர் – 9487599064
▶️ ஸ்ரீவைகுண்டம் – 9487599066
▶️ விளாத்திகுளம் – 9487599067
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை அல்லது பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News April 30, 2025

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

image

உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் (23) எட்டையாபுரம் சாலையில் நடந்து சென்றபோது இவரின் 120000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் (22), மாடசாமி (24), முத்துசெல்வம் (20), முத்தீஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும், பறித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.

News April 30, 2025

தூத்துக்குடி: லாரியில் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

image

திருச்செந்தூர் மயிலப்புரம் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன் தற்போது உடன்குடி கொட்டாங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். நேற்று நேற்று (ஏப்.29) திருச்செந்தூர் சென்று விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி உள்ளார். தோப்பூர் விலக்கு அருகே சென்ற போது நிலை தடுமாறி முன்னாள் சென்ற லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 30, 2025

ஊர்க்காவல் படை தளபதிக்கு எஸ்பி பாராட்டு

image

டெல்லி ஊர்க்காவல் படை உள்துறை அமைச்சகம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு விருதுகள் வழங்குகிறது. அந்த வகையில் தூத்துக்குடி ஊர்காவல் படையில் 20 ஆண்டுக்காலம் சிறப்பாக பணியாற்றிய ஊர்க்காவல் படை தளபதி உலகம்மாளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவரை நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

News April 30, 2025

நாளை காவல்துறை சார்பில் குறை தீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (ஏப்ரல் 30) குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மனுக்கள் மற்றும் ஏனைய மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

News April 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

தூத்துக்குடியில் மகளிர் கிரிக்கெட் அணித் தேர்வு

image

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான 12 வயதிற்கு மேற்பட்டோருக்கான மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு (மே1) வியாழன் அன்று தூத்துக்குடி JMJ கிரிக்கெட் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 8015621154, 8754004377 மற்றும் 9944833333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2025

திருமண தடை நீங்க வேண்டுமா? இங்கே வாங்க

image

குலசேகரப்பட்டினத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில், தலவிருட்சம் மாமரத்தின் கீழே மாவடி அம்மன் சிலை உள்ளது. அம்மனை குழந்தை பாக்கியம் இல்லாதோர் மாங்கனிகளை படைத்து வழிபாடு செய்வார்கள். அதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு செய்து வளையல் படைத்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!