Tuticorin

News March 31, 2025

தூத்துக்குடியில் ஆயிரம் கால் பள்ளிவாசல்; தெரியுமா?

image

காயல்பட்டினத்தில் ஆயிரம் கால் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பெரிய குத்பா பள்ளிவாசல் உள்ளது. சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் கி.பி. 842 இல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆயிரம் தூண்களைக் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு முறை இந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளிவாசலில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை சிறப்பு வாய்ந்தது. *புது தகவல்னா ஷேர் பன்னவும்

News March 31, 2025

சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இயங்குகின்றன

image

ஆயில் நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை கண்டித்து சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் கடந்த 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தூத்துக்குடியில் ஏராளமான டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வேலை நிறுத்தம் நேற்று இரவு விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து இன்று டேங்கர் லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

News March 31, 2025

புத்தொழில் களம் கனிமொழி எம்பி அழைப்பு

image

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி முன்னெடுப்பில் “புத்தொழில் களம்” என்ற நிகழ்ச்சி ஏப்ரல் 5-ல் நடைபெற உள்ளது. இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொள்ள இருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். *ஷேர் பண்ணுங்க*

News March 31, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

கோவில்களில் நகைகள் திருடியவர் கைது

image

கயத்தாறு அருகே கோனார்கோட்டை அம்மன் கோவிலில் கடந்த மாதம் நள்ளிரவில் அம்மன் கழுத்தில் இருந்த 16 கிராம் பொட்டுத்தாலி திருடப்பட்டது. அடுத்த சில நாட்களில் திருமங்களக்குறிச்சி கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், துர்கை கோவில்களில் 1 பவுன் மதிப்புள்ள 8 பொட்டுதாலிகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் நெல்லையை சேர்ந்த இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்து 21 கிராம் பொட்டுதாலிகளை மீட்டனர்.

News March 31, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு -நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்

News March 30, 2025

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நோய் தீர்க்கும் ஆலயம்

image

கோவில்பட்டியில் அருள்மிகு செண்பகவல்லி பூவனகர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளை தாண்டி பழமையான இந்த கோயிலில் கிழக்குப் பார்த்தபடி மூலவர் காட்சி தருகின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்தியர் தீர்த்தம் இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. இந்த ஆலயத்தில் வேண்டினால் பக்தர்களுக்கு தீராத நோயும், குறைவில்லா குழந்தை பேரும், நல்ல மண வாழ்க்கையும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *SHARE IT*

News March 30, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு 

image

நமது தூத்துக்குடியில் விஜய் இன்ஃபோ மீடியா மற்றும் ஜாய் யுனிவர்சிட்டி இணைந்து நடத்தும் +2,டிப்ளமோ, டிகிரிக்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்ற ஆலோசனைக் கருத்தரங்கு ராஜ் திருமண மண்டபம், பழைய பேருந்து நிலையம் அருகில் வைத்து நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இது சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமாரன் பங்கேற்கிறார். அனுமதி இலவசம். ஷேர்

News March 30, 2025

போக்சோ வழக்கு – இருவர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடி எஸ்.பி  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம்பகவத் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வன், புதுக்கோட்டை போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மடத்தூரை சேர்ந்த ராகுல் ஆகியோர் நேற்று முன் தினம் (மார்ச்-28) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

News March 29, 2025

தூத்துக்குடி: பில்லி சூனியம் விலக செய்யும் மந்திர மை

image

தூத்துக்குடி, ஏரல் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ளது சேர்மன் அருணாசல சுவாமி கோவில். இங்கு பேய் பில்லி சூனியம் பிடித்தவர்களுக்கு மந்திர மை ஒன்று வழங்கப்படுகிறது. ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகியவற்றை யாகத்தில் நெய் ஊற்றி பஸ்மாக்கி அதனை சுவாமி முன்வைத்து வழிபாடு செய்து வழங்குகிறார்கள். இந்த மையை இட்டால் பேய் பில்லி சூனியம் விலகும் என்பது நம்பிக்கை. *தேவைபடுவோருக்கு பகிரவும்*

error: Content is protected !!