India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு தூங்கும் வசதி பெட்டி மற்றும் 3 பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. இதில் வண்டி எண்: 16791 தூத்துக்குடி – பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 14-08-2024 முதலும், வண்டி எண்: 16792 பாலக்காடு – தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் 15-08-2024 முதலும், கூடுதலாக இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பேரிடர் போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற தகுதியானவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் https://awards.gov.in என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம், புனலூர் தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலானது தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டுமென்று இப்பகுதி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 16ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை பத்து மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைக்குளம் உச்சிப்பருப்பில் முத்துப்பாண்டி என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடிமின்னல் தாக்கியதில் 11 செம்மறி ஆடுகள் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் கருகி பலியாகின. இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய் துறையினர் பார்வையிட்டுள்ளனர். இதனால் தனக்கு மாவட்ட நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார். மின்னல் தாக்கியதில் தொழிலாளி மயக்கம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 14/08/2024 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 470 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆக.,16, 17 தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *சென்னையில் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்*
தென் மாவட்ட காவல்துறை பல்வேறு வழக்கு விசாரணைகளில் கடந்த ஒரு வருடத்தில் கைப்பற்றப்பட்ட 5,191.400 கிலோ கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை இன்று போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அதனை எரியூட்டி மின்கலத்தில் வைத்து எரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தென் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதற்கான நிகழ்வு சாத்தான்குளம் அருகே விஜயநாராயணம் பகுதியில் நடந்தது.
சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் குறித்து தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவர், “கடின உழைப்பு மற்றும் பாதை குறித்து தெளிவாக புரிந்ததால் தான் எல்லோரும் கொண்டாடும் மிகப்பெரிய நட்சத்திரமாக விஜய் உள்ளார். அதே தெளிவோடும், உழைப்போடும் அரசியலிலும் அவர் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து உங்களது கருது என்ன?
கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளம் கிராமத்தில் மேலத்தெருவில் வசித்து வருபவர் சமுத்திரபாண்டி(46). இவர் தோட்டத்தில் ஆடுகள் மேய்த்த போது திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியதில் 7 வெள்ளாடுகள் பலியாகின. அருகில் மரத்தின் அடியில் நின்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தாசில்தார் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Sorry, no posts matched your criteria.