India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர் தொண்டு நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் சமூக நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் நேற்றைய அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய விமானப்படைக்கு அக்னி வீர் வாயு திட்டம் மூலம் ஆட்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.8 முதல் ஜீலை. 28 வரை விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேம்பாரை சேர்ந்த மகாராஜா என்ற கூலித்தொழிலாளி கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள பன்றி இறைச்சி கடையில் இறைச்சி வாங்கியுள்ளார். இதற்கு அவர் பணம் தராததால் பன்றிக் கடை நடத்தும் செல்வகுமார் அவரது நண்பர் மரியசெல்வம் ஆகியோர் மகாராஜாவை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் செல்வகுமார், மரிய செல்வத்திற்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்திய விமானப்படைக்கு அக்னி வீர் வாயு திட்டம் மூலம் ஆட்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.8 முதல் ஜீலை. 28 வரை விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த சில நாட்களாக போலீசார் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 28 பேரை கைது செய்த போலீசார் 208 மது பாட்டில்களை பறிமுதல் செய்து 28 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. கனிமொழி உதவித்தொகை வழங்கினார். குறிஞ்சி நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து கனிமொழி பாராட்டினார். இதில், அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகளுக்கு மழை வெள்ள காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லாத இளைஞர்கள் இந்த உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தில் ஆவின் பால் கொள்முதல்19 ஆயிரம் லிட்டர் இருந்து வந்தது. தற்பொழுது 31,000 லிட்டராக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு 48 ஆயிரம் லிட்டராக உயர்த்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி ஆவின் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.