Tuticorin

News August 17, 2024

திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி எம்பி

image

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் வழிநின்று சமத்துவம் – சகோதரத்துவம் – சமூகநீதி காப்பதற்காக சமரசமின்றி பயணித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

News August 17, 2024

உரிமை தொகை வதந்தி: அதிகாரிகள் மறுப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் 19 , 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் இதில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என துறை அதிகாரிகள் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்*

News August 16, 2024

தூத்துக்குடி எஸ்பி உத்தரவு

image

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (16.08.2024) தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி, பொதுமக்களுக்கு சீரான போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News August 16, 2024

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினத்திற்கு விடுமுறை வழங்கப்படுகிறதா? என்பது குறித்து தனியார் நிறுவனங்களில் நேற்று (ஆகஸ்ட் 15) ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பெயரில் மாவட்டம் முழுவதும் உள்ள 89 தனியார் நிறுவனங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரியவந்தது. அந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

News August 15, 2024

இரவு நேர காவல்துறையினரின் தொலைபேசி எண்கள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 15.08.2024 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அவசர காலத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 15, 2024

தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

image

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் இன்று (ஆக.15) திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பழுதாகி நின்ற ஒரு படகை சோதனை இட்டனர். அப்போது அந்தப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக 60 பண்டல்களில் ரூபாய் 25 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய கடலோர காவல் குழும போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 15, 2024

தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது 

image

தமிழ்நாடு அரசின் சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2 ஆம் பரிசு கிடைத்துள்ளது. இதனை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு அமைச்சர் நேரு இன்று வழங்கினார். இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த ஆட்சியருக்கும், அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.

News August 15, 2024

தூத்துக்குடி மாவட்ட வேளாண்துறை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி பயிர் சாகுபடி துவங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆர்கானிக் உரம் என்ற பெயரில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உரங்களின் அடங்கிய சத்துக்கள் தெரியாத நிலையில் இதனை விவசாயிகள் வாங்க வேண்டாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 15, 2024

இசைப்பள்ளியில் சேர ஆட்சியர் அழைப்பு

image

தூத்துக்குடியில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. குரல் இசை, பரதநாட்டியம், வயலின், தேவாரம், தமிழ் நாதஸ்வரம் போன்ற பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 14, 2024

தூத்துக்குடி காவலர்கள் ரோந்து பணி விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், மணியாச்சி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் இரவு நேர ரோந்து பணி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!