India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் இன்று (ஆகஸ்ட் 19)நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தூத்துக்குடியில் கலெக்டராக இருந்த லட்சுமிபதி முதலமைச்சரின் இணைச் செயலாளராக நியமிக்கபட்டதை தொடர்ந்து இளம்பகவத் இன்று முதல் தூத்துக்குடி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று கடல் திடீரென 50 மீட்டர் துாரத்திற்கு உள்வாங்கியது.பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.மேலும் பழமையான சுவர் ஒன்று வெளியே தென்பட்டது. 3000 ஆண்டுக்கு முன் காயல்பட்டினத்தில் பிரமாண்ட துறைமுகம் இருந்ததால் அதற்கும் இந்த சுவர்கும் இடையே தொடர்பு இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிகின்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா ஆக.24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் சிவப்பு சாத்தியானது ஆக.30, பச்சை சாத்தி ஆக.31, திருத்தேர் வழிபாடு செப்டம்பர்.2 ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வட்டாட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வட்டாட்சியராக இருந்த பிரபாகரன் திருச்செந்தூர் நில எடுப்பு வட்டாட்சியராகவும், திருச்செந்தூர் நில எடுப்பு வட்டாட்சியராக இருந்த சங்கரநாராயணன் எட்டையாபுரம் வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைப்போல் மேலும் 7 வட்டாட்சியர்களை மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணற்றில் நீராடினர். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி, ராம்நாடு, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிருங்கள்*
தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவிற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, சோ.தருமன், உதயசங்கர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
திருவனந்தபுரத்திலிருந்து கோவில்பட்டி வழியாக வேளாங்கண்ணிக்கு வருகின்ற ஆகஸ்ட் 21, 28 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய நாட்களில் ஒவ்வொரு புதன்கிழமை சிறப்பு ரயில் (வ.எண்: 06115) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு, ஆகஸ்ட் 22, 29 மற்றும் செப்டம்பர் 05 ஆகிய தினங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறுமும் (வ.எண்: 06116) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் துவங்கியது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணிகள்(06668/06667) ரயிலானது வரும் 19ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே இன்று(ஆக.17) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பாலருவி ரயில் தூத்துக்குடியில் இருந்து கிளம்புவதால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.